14 ஓ………. உலக தமிழினமே..

நிறுத்துங்கள் !!!
மௌனமென்னும் மண்
பூசி தான் –

ழத்தில்
வந்தேறியின் சுவடுகள் கூட
வெற்றிக்கொடியின்
சின்னமாயின.

ழத்தில்
தமிழரின் ரத்தம்
ஈரமாக மட்டுமே
மீதமானது.

………. உலக தமிழினமே
மௌனம் களைந்து
புறப்படுவோம் வாருங்கள்;

போர் வேண்டாம் –
ஓர் குரலாவது கொடுப்போம்,
அதை; எல்லோரும் கொடுப்போம்!!
——————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

13 ஓ………. உலக தமிழினமே..

யாருக்கேனும் எழுதுகோலில்
ரத்தம் விட்டு எழுத
எண்ணமா?

போன வருடம்
ஈழத்தில் இழைக்கப் பட்ட
கொடுமைகளை சற்று பாருங்கள் –

படிப்பவரின் கண்களில்
ரத்தமும் சொட்டலாம்!
——————————————–

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

12 ஓ………. உலக தமிழினமே..

ள்ளிக்கூடத்து
புத்தகங்கள்
நெருப்பில் விழுந்த
இதழ்களாகவே
பாதி கருகியும் கருகாமலும்
ஈழத்து புதை குழிகளில்;

வெறும் கணக்கு சொல்கிறார்கள்
சண்டாளர்கள் –
‘நான்கு ‘பாடி’ கிடைத்ததாம்!!
—————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

11 ஓ………. உலக தமிழினமே..

புதைகுழிகளை தோண்ட
அரசானையாமே ?

எங்கேனும் என் இறந்த
மகனின் அல்லது கணவனின்
எலும்புத் துண்டு கிடைக்குமாயின்
கொடுத்து செல்லுங்கள் –

சிங்கள நாய்கள் தெருவோரம் வந்தால்
எடுத்து வீசலாம் –

ஏதேனும் இரண்டு தமிழச்சிகளாவது
மிட்சப் படட்டும்!!
———————————————-

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

10 ஓ………. உலக தமிழினமே..

ர்ப்பிணி
பெண்களின் வயிறு
கிழித்து
தமிழனென்பதால்
சிசுவை கூட
கொண்றுபோட்ட
சிங்களரா தமிழரை காப்பர்?

………. உலக தமிழினமே
வெட்கம் கொள்ளாதே
அவன் காலுக்கு செருப்பினும்
கேவலமாக எண்ணப் படுகிறோம் இங்கு; ஈழத்தில்
முடிந்தால் சற்று கோபப் படு;

யாரேனும் இருக்கிறீர்கள் என்றாவது
தெரிந்துக் கொள்ளட்டும் சிங்களவர்!!
————————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்