நிறுத்துங்கள் !!!
மௌனமென்னும் மண்
பூசி தான் –
ஈழத்தில்
வந்தேறியின் சுவடுகள் கூட
வெற்றிக்கொடியின்
சின்னமாயின.
ஈழத்தில்
தமிழரின் ரத்தம்
ஈரமாக மட்டுமே
மீதமானது.
ஓ………. உலக தமிழினமே
மௌனம் களைந்து
புறப்படுவோம் வாருங்கள்;
போர் வேண்டாம் –
ஓர் குரலாவது கொடுப்போம்,
அதை; எல்லோரும் கொடுப்போம்!!
——————————————
























