5 உடைந்த கடவுள்!!

ரெல்லாம்
இருந்த குளங்கள்
பிளாட் போட்டு
விற்பனையாகி விட்டது;
 
ப்ளாட்டிற்குள்
ஸ்விமிங் புல்
கட்டியாகி விட்டது;
 
ஸ்விம்மிங் புல்லின் கரையில் இருந்து
நினைத்துக் கொள்கிறோம் –
குளக் கரையின் சில்லென்ற காற்றை,
 
ஸ்விம்மிங் புல்
சிரித்துக் கொண்டது.
குளக்கரை நம் கைவிட்டு
எங்கோ போனது.
 
தோ ஒரு விதத்தில் ஏற்பட்ட இழப்பை
வளர்ச்சி என்றே சொல்லிக்கொள்கிறோம்
நாம் மட்டும்!
————————————————————
Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

4 உடைந்த கடவுள்!!

தெருவெல்லாம் சுத்தம்
செய்தான்,
 
சாக்கடை நீரில் இறங்கி
தூர் வாரினான்,
 
உடைந்த சுவரு பூசி
மெழுகி கொடுத்தான்,
 
இரவு கருக்கையில் தெருவோரம்
விழுந்துக் கிடந்தான் –
மது அவனை குடித்திருந்தது.
 
வெறும் நாற்றமென்று மூக்கை பிடித்து
ஒதுங்கி சென்றோ –
குடிகாரன் என்ற ஒற்றை வார்த்தையிலோ
சுருங்கி அடங்கிப் போகிறோம் நாம்;
 
மானுடம் வலுக் கொள்கிறதா என்றால்
இல்லை என்கிறது – இக்கவிதை!
————————————————————–
Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

3 உடைந்த கடவுள்!!

வ்வொரு முறை
கண்ணாடிக் குவளையில்
தண்ணீர்  ஊற்றும் போதும் –
 
விஸ்கியின் சிவந்த நிறம்
குவளையிலிருந்து இதயம் வரை
நிரைகிறதாம்; நண்பன் சொன்னான்.
 
னக்கு, எங்கோ யாரோ
சாப்பிடாமல் பட்டினியில் உயிர் விட்ட
ஒரு சோற்றுப் பொட்டலத்தின் விலை
பத்தோ இருபதோ –
நினைவிற்கு வந்தது!!
———————————————————-
Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

2 உடைந்த கடவுள்!!

ன்றோ
பல ஆண்டுகளாய் பூமியில்
புதைந்து கிடக்கிறது
தங்கம்;

தோண்டி எடுத்தவன்
தானே செய்ததாக
சொன்னான்,
செம்மொழி!
———————————-

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

1 உடைந்த கடவுள்!!

சையோடு கையும் தேய
போஸ்டர் ஒட்டிய
எந்த பாட்டாளியையும்
எந்த தலைவனுமே திரும்பிப்
பார்ப்பதில்லை;

பாட்டளிகளின்
சாமியறையில் மட்டும் எப்படியோ
மாலையும் பொட்டுமாய்
நிறைய பேர் வெட்டியாக!!

——————————————–

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக