நீயந்த நிலவிற்கும் மேல்..

 

 

 

 

 

 

1
னக்கென்ன
வனம் கேள் வானம் கேள்
கடல் கேள் காதல் கேள்
மண் கேள்
மலையும் ஒரு காட்டையும் கூட கேளேன்..

எதுவாயினும் உனக்காகக்
கொண்டுவருவேன்;
நீ உனது சின்ன சிரிப்பை தா போதும்!!
—————————————————–

2
தென்ன மல்லிகை முற்றமும்
அதன் அருகே நிலாவும்
கூட நீயும்.. ?

எனக்கு நீ
உனதருகில் மல்லிகை முற்றம்
நம்மோடு நிலா

ஏன்னா
மீதி எல்லாம் வரும் போகும்
போகும் வரும்,

நீ வருவாய்
வருவாய்
போகமாட்டாய்..
—————————————————–

3
னக்குதான்
பேச்சிலென்ன தேன் குழைந்திருக்கோ ?

உனக்கு தான்
காற்றில் சிறகுகள் வீசி பறக்கத்
தெரிகிறதோ?

உனக்கு தான்
தேவதையின் சிரிப்பழகும்
மலர்களின் மெல்லழகும்
கூடுதலோ..

காணுமிடமெலாம்
என் கண்களுக்கு நீயே தெரியுமந்த
வித்தை கூட
உனக்கே தெரிந்திருக்கிறது..

உண்மைதானே
இப்போதெல்லாம் எனக்கு சிரிப்பும்
அழையும் கூட ஒன்றாகவே தெரிகிறது
இரண்டிலும் நீயே இருப்பதால்..
—————————————————–

4
ள்ளிக்கூடம்
போகையிலும் சரி

கல்லூரி காலமும் சரி

அலுவல் சென்றாலும் சரி

எங்கே எதன் பொருட்டு நான்
உயிர்த்திருந்தாலும் சரி

உனை நினைத்திருக்கிறேன்
என்பதே உண்மை..
—————————————————–

5
து உனக்கு பிடிக்குமோ
அதை உனக்கு தர விரும்புகிறேன்,

எதில் நீ
நிறைவாயோ
அதையே தர விரும்புகிறேன்,

எதில் உனக்கு மகிழ்வோ
அதையே தரத் தான்
தவிக்கிறேன்

அது பிரிவாயினும் சரி
அது உயிராயினும் சரி
உனை மறப்பதாயினும் கூட..
—————————————————–
வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்..

 

பாலையின் சுடுமணலில்
வாழ்வையும் சுட்டவர்கள் நாங்கள்;
குளிர்க்காற்றில் ஆசைகளைக் கொய்து
விடுமுறையில் மட்டுமே கொஞ்சம்
வாழ்ந்துக்கொண்டவர்கள்..
 
போர்வைக்குள் சுடும்
கண்ணீரை மறைத்தவர்கள் நாங்கள்;
ஒட்டகத்தோடு சந்தோசத்தையும் விரட்டி
கனவுகளுள்
வயதை தொலைத்தவர்கள்..
வரிசையில் நின்று நின்றே
வானத்திற்கு
ஏணியைப் போட்டவர்கள் நாங்கள்;
கைப்பேசிக்கு தெரிந்த முத்தத்தில்
கருத்தரிக்காத முட்டைகளை உடைத்தவர்கள்..
 
பெண்ணெனும் மந்திரச் சொல்லுள்
புன்னகையை ஒளித்தவர்கள் நாங்கள்;
அத்தைப் பெண்ணோ.. மாமனின் மகளோ..
பக்கத்து வீடோ.. காதலியோ,
அழுகையை மட்டுமே
மரணம் வரை சுமப்பவர்கள்..
வலிக்குமொரு பாடல் வந்தால்கூட
துடி துடிக்கும் பித்தகர்கள் நாங்கள்;
அழுக்குத் தலையணையோ
அன்றைய சினிமாவோ
கதைப் புத்தகமோ பழைய கடிதங்களோ
எதையோ படித்து எதற்கோ உயிரை நொந்தவர்கள்..
 
உறவிற்கும் உதவிக்கும் ஓடி ஓடியே
வழுக்கையானவர்கள் நாங்கள்;
வாட்சப்பில் காதலியையும்
மின்னஞ்சலில் அம்மா பெயரையும்
வங்கிக் கணக்கில் அப்பாவும்
கைப்பேசி முகப்பில் அக்காப் பிள்ளைகளையும் வைத்து
தனைமட்டும் முழுதாய் இழந்தவர்கள்..
 
பிரிவெனும் துயரில் நொந்து
பாதி இரவில் பலமுறை எழுந்தழுது
பேருக்கொருமுறை
மீண்டுமிறப்பவர்கள் நாங்கள்;
அம்மாவை தேடி மனைவியை தேடி
பிள்ளைகளைப் பிரிந்து
மௌனக் குழிக்குள் சோகமாய் சரிபவர்கள்..
 
கூலிக்கு வேலையின்றி
மேலே படிக்க வாய்ப்புமின்றி
திறமைதனை
அரபிகளுக்கு அடகுவைத்தவர்கள் நாங்கள்;
கூரைவீட்டிற்கு ஓலை முடையவும்
கிழிந்த கால்சட்டைக்கு சன்னலை மூடவும்
சாய்ந்த சவுக்குக் குளியலறைக்கு
ஒரு புதிய மூங்கில் கதவு போடவுமே
கடவுச்சீட்டோடு எங்களின் கனவுகளையும் விற்றவர்கள்..;
 
ஆம்…….
நாங்கள் பாலைமண்ணின் சுடுமணலில்
எங்களின் வாழ்வையும் சுட்டவர்கள்..
————————————————————–
வித்யாசாகர்
Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நீயின்றி அமையாது உலகு…

 

 

 

 

 

 

 

 

 

 

 

1
ரு விடிகாலையின்
கனவுபோல நீ,
எதிரிலிருக்கமாட்டாய்
நினைவில் நிறைய இருப்பாய்..

தண்ணீரிலலயும் முகம் போல
உனது நினைவும் இங்குமங்குமாய் அலைகிறது
ஆனால் கொஞ்சம் கூட
மறைவதில்லை..

அதெப்படி மறையும்
நானின்னும் இறக்கவேயில்லையே.. (?)!!
——————————————————

2
னக்கான
எதுவுமே எனக்கு கனமில்லை

உன் பெயர்
சொல்லுமிடத்தில் துயரேயில்லை

உனக்காக என்று எண்ணிக்கொண்டால்
எனக்கு கடலில் நடக்கலாம்
நெருப்பில் படுக்கலாம்

வேண்டுமெனில் கத்தியெடுத்து
எனது மார்பில் குத்திப்ப்ப்பார்,
வழியும் ரத்தம்கூட போகுமென் உயிருக்காக
வருந்திவிடாது; ஆனால்

கண்டிப்பாக
உனை  பிரிவதையெண்ணி தவித்தேபோகும்..
——————————————————

3
நீ
ரின்றி
அமையாது உலகு,
நீயின்றியும்
அமைவதில்லை நான்..

சப்தங்களால் ஆன
பிரபஞ்சமிவை;
உன்னால் மட்டுமே ஆன
பிஞ்சு இதயம் நான்,

இருட்டும் வெளிச்சமுமானவை
பொழுதுகள்;
நீயும் நீயும் மட்டுமேயானவன்  நான்!!
——————————————————

4
னை நினைப்பதைவிட
ஒரு பெரிய
தவமில்லை,

உனை மிஞ்சிய அழகாய்
எவருமே எனக்குத் தெரிவதில்லை,

உனை ஆராதிப்பதைவிட
மனசு வேறெதையுமே
அத்தனை ஆராதிக்க விரும்புவதில்லை;

அப்படியென்ன
‘பெரிய இவளா நீ’ என்கின்றனர் சிலர்

ஆம்;
எனக்கு நீ எப்போதுமே
பெரிய அவள் தான்..
——————————————————

5
தூ
க்கிலிடும் தருணம்
இறந்துவிடுவோமென
தெரிந்தும்
அவன் கடைசியாய் இவ்வுலகை
காணும் தருணம் எத்தனை மகத்தானதோ (?)

அத்தனை கனத்தோடுதான்
பார்க்கிறேன் உனை
ஒவ்வொருமுறை விட்டுப் பிரிகையிலும்..
——————————————————
வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அன்று நீயிருந்த கிணற்றடி..

1
ஏ..
பெண்ணே என்ன உறங்குகிறாயா,
எழுந்து வா வெளியே

வந்து வெளியே தெரியும் வானத்தையும்
நட்சத்திரங்களையும்
வெண்ணிலாவையும் காண அல்ல,

உனையொருமுறை
நான் பார்த்துக்கொள்ள..
——————————————————

2
தீ
க்குச்சி சுடும் மனசாகவே
வலிக்குமுன் மௌனமும்
நீயில்லா அந்தத் தெருவும்,

வெடித்துப் பேசுவதை விட
வெறுத்துப் பார்ப்பது கொடூரமென
எனக்கருகிலிருக்கும் மரங்களுக்கு தெரிந்திருப்பின்
அது தன் இலைகளை கூட உதிர்த்துகொண்டிருக்கும்
ஏன் கிளைகளையும் ஒடித்துக் கொண்டிருக்கும்;

என்ன அவைகள்
மீண்டும் துளிர்த்துக் கொள்ளும்

என்னால் நீயின்றி
அழக்கூட முடியாதடி என்
மழைப்பெண்ணே..

எனக்கு கிளையும் நீதான்
இலைகளும் நீதான்
உயிரும் நீ மட்டுந்தான்..
——————————————————

3
வ்வொரு முறை
உனை விட்டுப் பிரிகையிலும்
எனையெங்கோ நான்
விட்டுவிட்டுச் செல்வதாகவே உணருகிறேன்;

நீயில்லாத தனிமையை மட்டும்
கொடூரமென்றெண்ணி
கலங்குகிறேன்,

உன்னோடிருக்கும்
சில பொழுதே உயிர்ப்பின்
மிச்சமென மகிழ்கிறேன்..

நீ எனக்கு வெறும்
கொண்டாட்டமல்ல, நீ தான் எனது
உயிர்க்காற்று போல;

நீ நின்றால்
நானும் நின்றுவிடுவேன்..

——————————————————

4
நீ
உடனிருந்தால்
உணவு வேண்டாம்,
நீயிருப்பின்
தூக்கம் வேண்டாம்,
நீ உடனிருக்கையில் உனையன்றி
வேறொன்றுமே வேண்டாம்..

உனது சிரிப்பில் இரவு தீரும்
நீ பார்த்தால் பகலும் போகும்
உன்னோடிருக்கையில் ஒரு யுகமென்ன அது
அதுவாக தீரும்..

நீயென்பது தான்
எனக்கு யுகம்..
நீ மட்டுமே எனது யுகத்திற்குப் பின்னாலும்..
——————————————————

5
தோ
அந்த காற்றுதான் எனதுயிர்
நீ சுவாசித்த காற்று..

அதோ
அந்த சிரிப்புதான்
எனது பிரியம்

நீ சிரிக்கும் சிரிப்பு..

அதோ
அந்த இடம் தான்
எனக்கு வனம்
நீ பார்வையால் அம்பெய்திய இடம்..

அதோ
அந்த கிணற்றடி தான்
எனது கல்லறை
நீயில்லா தனிமையை நான்
மரணக் கண்களில் காணுமிடம்..
——————————————————
வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சந்தவசந்தத்தின் இணையக் கவியரங்கம்..

நாவினால் தொட்டாலும் இனிக்கும்
தொடாது பார்த்தாலும் அழகு சொலிக்கும்
அண்டம் பேரன்டமென ஆராய்ந்துப் பார்த்தால்
அங்கே மூத்த நரைகொண்டு ஒரு சொல்லேனும்
தமிழில் அமர்ந்திருக்கும், அத்தகு தாய்மொழி தமிழுக்கு என் முதல்வணக்கம்..

சோக சக்ரவர்த்தி யென்ன
அத்தனைப் பெரிய வீரரா? ஆமெனில் வந்து எமது
அசோக் கவிஞரிடம் தமிழ்பாடி வெல்லட்டும்
ஒரு கவி பாடி ஓயட்டும்,

சற்றும் சாயாது வாழும் தமிழை
சொல்லாலே முத்தமிடும் அருங் கவிஞர்
தமிழ் பாவாலே எமையழைக்க
நாவழகு கொண்ட நற்றமிழ் தொண்டர்
தலைவர், திரு. அசோக் அவர்களுக்கு பேரன்பு வணக்கம்!

மது தீந்தமிழ் சொல்லெடுத்து
தேரழகு பூட்டியொரு
பா வகையை பயிற்றுத் தந்த
எம் அருந்தமிழ் பெரியோர்களுக்கு வணக்கம்..

டையிடையே வந்து
தாகத்திற்கு நீரருந்தும் வானம்பாடியை போல
ஏக்கம் கூடுகையில் வந்திங்கு பாட்டருந்தி போகிறேன்
உங்களின் சொற்களை மிகுந்த சிநேகத்தோடு காண்கிறேன்
நலம் நலமறியும் ஆவலை காண்பித்துக் கொள்ளாமலே
உங்களில் ஒருவராகவே வாழ்கிறேன், கருத்திடாமைக்கும், சொல்லிடாத வணக்கத்திற்கும் மன்னித்து அன்பை மட்டுமே ஏற்பீர்களாக..

அன்புடையோர் அனைவருக்கும், நட்புள்ளம் கொண்ட சினேகவெளியில்
கவிதை கடலாக தனித்திருக்கும்
எனதன்பு படைப்பாளிகளுக்கு தீரா பாசம் மிகு மதிப்பான வணக்கம்!!

தோ “சித்திரக்கவிதை” கவியரங்கத்தில் பகிர்ந்துக்கொண்டது..

நன்றியுடன்..

வித்யாசாகர்

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்