157 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

ண்டதும்
கேட்டதும்
மெய்யோ? பொய்யோ??
 
ஆடலும்
பாடலும்
மெய்யோ? பொய்யோ?? 
 
ஆள்பவர்
யாவரும்
மெய்யோ? பொய்யோ??
 
அண்டமும்
வீடும்
மெய்யோ? பொய்யோ??
 
நானும்
நீயும்
மெய்யோ? பொய்யோ??
 
நகர்வும்
மரணமும்
மெய்யோ? பொய்யோ??
 
மெய்யும் பொய்யுமாய்
மடிவதும்  
பிறப்பதும்
ஏனோ? ஏனோ?? ஏனோ??? 
———————————————-
Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

156 யாரை காக்க; யாரை கொல்வதோ பராபரமே!!

யாரை காக்க
யாரை கொல்வதோ?
 
யாரை கொண்டால்
நீதி மிஞ்சுமோ..?
 
யாரை கேட்டு
யார் திருந்துவரோ?
 
யாரும் யாதுமாகி
போகாதலில் –
இன்னும் யார் யார்
போவரோ பராபரமே???
 
இன்னும் என்னென்ன
ஆகுமோ பராபரமே????
———————————————-
Posted in உடைந்த கடவுள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

7 சுட்டு எரிந்ததொரு காடு..

யார் மரணமும்
யாரையுமே நோகவில்லை 
முடிவில் –
முள்ளிவாய்க்காலை விழுங்கி
சுடுகாடாய் கனத்தது
உலக தமிழரின்; கல்மனசு!
———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

6 சுட்டு எரிந்ததொரு காடு..

போர் போரென
கதறிய கத்திய
அவலகுரலில்;
செவிடாகிப் போயினர்
உலகத்தினர்,
ஊமையாகிப் போயினர்
தமிழர்கள்!
———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

5 சுட்டு எரிந்ததொரு காடு.. (64)

ணும் பெண்ணும்
குழந்தையுமென –
கொன்று குவித்தவனுக்கு
பெயர் போர்வீரனும்,
கொள்ளப் பட்டவனுக்குப் பெயர்
தீவிரவாதியுமெனில்,
 
சொன்னவனை இனி
சிங்களனென உரைப்போம்!
———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக