அன்பிற்குமுண்டோ அடைக்குந் தாழ்..

 

 

 

 

 

 

 

1
னக்கு நானென்றால்
எத்தனைப் பிடிக்குமோ தெரியாது,

எனக்கு நீயென்றால்
அதை எப்படிச்சொல்ல..

இதோ இந்த வானத்தைப்
பார்.,
அதோ எங்குமாய் நீண்டு விரிந்த
கடலைப்பார்.,
முடிந்தாலந்த நீலவானின் நட்சத்திரங்களை
மொத்தமாய் எண்ணிச் சொல்;

முடியாவிட்டால் நம்பிக்கொள்
அவைகளையெல்லாம்விட அதிகமானது
உன் மேலான எனதன்பு..
———————————————

2
னக்கும்
எனக்கும்
தூரம் மனசளவுதான்;

உனக்குப் பிடித்த
எனக்குப் பிடித்த நம் மனசளவு!

உனக்கும்
எனக்கும்
அழகு ஒன்றுதான்;

உனை விரும்பும்
எனை விரும்பும்
நம் அன்பொன்றுதான் அழகு!

உனக்கும்
எனக்கும்
உயிர் ஒன்று தான்;

உனக்குள் துடிக்கும்
எனக்குள் துடிக்கும்
இந்தக் காற்றைப்போல நம்
உயிருமது ஒன்றுதான்..
———————————————

3
வி
டிகாலை வெளிச்சத்தில்
கத்தும் சிட்டுக் குருவியைப் போலத்தான் நானும்;

உனது சின்ன சிரிப்பைக்
கண்டாலும் எனக்கு
விடிந்துவிட்டதாய் எண்ணிக்கொள்கிறேன்..
———————————————

4
ங்கோ தூரத்தில் கேட்கும்
சிட்டுக்குருவியின் சப்தமும்,
எங்கோ தூரத்தில் கேட்கும்
சாவுமேளத்தின் சப்தத்தையும் போலத்தான் நீயும்

எங்கோ எனக்குள்ளே
ஒலித்துக்கொண்டே இருக்கிறாய்,

எனக்குள் நானாய்
நீயே உயிர்த்திருக்கிறாய்!!
———————————————

5
நீ
வந்து நிற்பதை
தினமும் காண்கிறேன்,
தெருமுனை சென்று
திரும்பிப் பார்க்கிறாய்
காண்கிறேன்,
வெகுநேரம் காத்திருக்கிறாய்
காண்கிறேன்,
எதையோ எண்ணி உருகுகிறாய் காண்கிறேன்;
நீ செய்யும் எதையும்
எனக்காகவே செய்வதாக யெண்ணி
சுவாசிக்கிறது என் இதயம்..

ஒருவேளை
அந்தக் காத்திருப்பும்
தவிப்பும் எனக்கானதல்ல என்றறிவேனெனில் அதன்பின்
அந்த இதயம் சுவாசிக்குமா தெரியவில்லை..
———————————————
வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வா வந்து வானம் நனை மழையே..

 

 

 

 

 

1
ழையே
ஓ மழையே
ஒருமுறை சோவெனப் பெய்துவிடேன்..

மழைவானம் நீந்திப் பறக்கும்
பட்டாம்பூச்சிபோல
நானுமுன்னுள் ஒருநாள்
ஆழ்ந்துதான் போகிறேனே…
————————————————————

2
னக்கென ஒரு சம்மதம்
தருவாயா ?

அடுத்த ஜென்மமென ஒன்று
உண்டெனில்
நீயெனக்கு மகளாய் பிறந்திடேன்,

உனைக் கொஞ்சி கொஞ்சியே யெனது
நரைகொட்டித் தீரட்டும்..
————————————————————

3
ன்னைக்கடந்து என்னால்
போகமுடிவதில்லை யென் மழைப்பெண்ணே..

இரவில் நீ
விளக்கணைத்துவிட்டுப் போய்விடுவாய்
ஆனால் உறங்கியிருக்கமாட்டாய்
என்பது தெரியும்,

நான் நீ வந்துநிற்குமந்த
சன்னலோரத்தையும் வாசல் கதவையும்
எடுத்துபோய்
எனது நினைவுவரை ஒளித்துவைத்திருப்பேன்,

நீயில்லா தனிமையைக்கொண்டு
இருட்டுமெனை கொள்ளத்துடிக்கும்..,

இருந்தாலும்
வெள்ளெந்தியாய் வாசலில் நின்று நான்
ஒரு கொசுவிடம் பேசிக் கொண்டிருப்பேன்
எனது மழைப்பெண்ணைப் பற்றி..
————————————————————

4
ங்கோ
கண்ணைக் கட்டிக்கொண்டு
நடக்கிறேன் நான்,

நீயோ
காதைப் பொத்திக்கொண்டு செல்கிறாய்..,

உனக்கு நானும் கேட்கவில்லை
எனக்கு நீயும் தெரியவில்லை

உள்ளே அக்கினியாய்
தகிக்கிறது அன்புத் தீ
வெறும் மனசாக மட்டுமே
இருவரும் ஒளிர்கிறோம்..
————————————————————

5

சிலவற்றை நான்
மிக பத்திரமாக வைத்திருக்கிறேன்,

நீ தொட்ட பொருளோ
அல்லது நீ பார்த்த பொருளோயெல்லாமில்லை

உனது பெயரின் சில
எழுத்துக்களது..
————————————————————
வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நம்பிக்கையெனும் நெற்றிக்கண் திற..

wallpaper-for-mobile-27-610x915

கால்கள் உடைந்திடாத சக்கரம்
காலத்தோடு சுழல்கிறது
பிறகு ஊனத்தைப் பற்றி பயமெதற்கு ?

எல்லாம் மாறும்
காட்சிகளே பிறழ்கிறது; பின்
தோற்பதென்ன மூப்பதென்ன கேடு..?

வெற்றி உதிர்ந்திடாத மனங்களே
நம்பிக்கைக்கு சாட்சியெனச் சொல்லி
இன்னும் எத்தனை முகங்களில் அரிதாரம் பூச..?

வாழ்வது நிலைக்கலாம் நீளலாம்
சாவது ஒருமுறை யெனில்
தினம்தினம் செத்துப் பிழைப்பதேன்..?

வாழும்போதெல்லாம் வெற்றிக்கு ஏங்கி
கடைசிவரை தோல்விக்கே பயந்துத் தீர்வதைவிட
கொஞ்சம் வாழ்ந்துகொள் போதும்..

உறக்கத்தை சுமையாக்கி
பசியை பழகிக்கொள்
புகழ்ச்சியை பணத்தை கடந்துசெல்.,

பயமுட்களில்லா பாதையமை
சமூகத்தை அன்பொழுக நேசி
உன் வெற்றியை பிறர் வெற்றியாக்கு.,

இருப்பதை இயன்றவரைப் பகிர்ந்துகொள்
இல்லறத்தை உண்மையின் கண்ணாடியாக்கு
நானிலத்தையும் அறம்கொண்டு அள.,

கண்களை முயற்சி சிவக்க திற
மனதை நம்பிக்கை கனக்க மூடு
பயணத்தை உழைப்பால் மட்டுமே தொடர்.,

உலகில் எவரும் முழு தீயவரில்லை
நம்புமளவு எல்லோருமே நல்லோருமில்லை
பின் யாரிங்கே உயர்வும்? தாழ்வும்?

எதிர்மறை உடை; சமத்துவம் ஏந்து
எதிரும் புதிரும் ஒன்றென அறி
இயற்கையை உனக்குள்ளிருந்து வெளியே பார்; பார்க்க பழகு

ஒருமுறையேனும் மன்னித்துவிடு
ஒருமுறையேனும் கொடுத்து மகிழ்
ஒருமுறையேனும் அன்பு செய்..

பிறகு எட்டித்தான் பாரேன்
ஒரு கணம் நீ
சிகரத்தைத் தொட்டிருப்பாய்;

அல்லது
சிகரம் வெற்றிகளின் கூடாரமாயுனைத் தொட்டுக்கொள்ள
ஒரு தவமேனும் பூண்டிருக்கும்!!
————————————-
வித்யாசாகர்

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அழகெனும் சொல்லுள் ஆதிக்கம் செய்பவள்..

 

 

 

 

 

 

 

1
ரு செடிக்கு அருகில்
நின்றுகொண்டு
அதில் பூக்கவிருக்கும் மலர்களைக் காண
காத்திருத்தல் எப்படிப்பட்ட ஒரு தவமோ
அப்படியெனக்கு,

உனை யொரு பொழுதில்
கண்டுவிடுவதும்..
————————————————————

2
ழகென்றால்
என்னவென்று நினைக்கிறாய் ?

இந்த உலகிலிருக்கும்
அத்தனைக் கண்ணாடிகளும்
அழகு தான்;

நீ பார்க்கையில் மட்டும்..
————————————————————

3
தினமும் உன்னிடம்
சாப்பிட்டாயா
தூங்கினாயா
வேலையா இருக்கியா
என்றெல்லாம் கேட்பதுண்டு;

அது நீ சாப்பிட்டதை
உறங்கியதைப் பற்றி அறிவதற்கல்ல,

உன்னிடம் நான் பேசியதாயும்
என்னிடம் நீ பேசியதாயும்
ஏதேனுமொரு கவிதைக்குள்
உனைப்பற்றி எழுதிவைக்க..
————————————————————

4
னக்கொரு கோயில் கட்டவா
என்றுக் கேட்டால் நீ
சிரிப்பாய் தானே..?

ஆனால் உனக்கென கட்டிய
பல கோவில்கள்
மனதுள்ளே தினம் தினம் இடிந்துபோகிறது,

கோவிலில்லா விட்டாலென்ன
சாமியை தேடிப்பார் எனக்குள்ளே
எங்கும் நீயே நிறைந்திருப்பாய்..
————————————————————

5

தேனுமொரு பறவைக்கு
தெரியுமா அந்த மொழி?
தெரிந்தால்
அதனிடமாவது சொல்லியனுப்பி விடுவேன்
உனக்கான நினைவையும்;

இந்த இரவின்
நீயில்லா கொடூர தனிமையைப் பற்றியும்..
————————————————————
வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வானத்திற்கு கீழே நிலவென ஒளிர்பவள்..

 

 

 

 

 

 

மாடியில் நின்று நீ பார்க்கையில்
கீழே பூமியில் பூத்த மலர்களை நீ
கண்டிருக்கமாட்டாய்..

எனைச் சுற்றி மலர்களாய் பொழிவது
மேலிருந்து நீ
பார்க்கையில் மட்டுமே
சாத்தியப்படுகிறது..

மாடிவீடு என்றாலே
இப்பொழுதும் அந்த மாடியும்
மேலிருந்து எட்டிப்பார்க்கும் நீயும்
சட்டென புகைப்படத்தைப் போல
எதிர்படுவீர்கள் எனக்குள்.,

நீ மேலே நின்று
சிரிப்பது எத்தனை அழகு
தெரியுமா?

உனது சிரிப்பின் பேரழகு
அத்தனை வசியமானவை, நான்
நடக்கும் தெருவெல்லாம்
நினைவுகளால் –
பூத்தூவி மகிழ்பவை அவைகள் தான்.,

உனது சிரிப்பும்
மெல்லியப் பார்வையும்
நீரும் காற்றும் போல எனக்கென்றால்
நீ கூட நம்பமாட்டாய்,

உனக்கு இப்போது கூட
என்னை நானாக தெரியாது
உண்மையில் நான்
இன்றும் அதே
உன்னுடைய நானாகவே இருக்கிறேனென
எழுத்தில் எப்படிக் காட்ட?

எல்லோருக்கும் அது ஒரு
மாடி வீடு
எனக்கு மட்டுந்தான் அது
நீயிருக்கும் வீடு..

அன்றெல்லாம்
மாடி வீடுகளில் தான்
காற்று சூடாக வரும்
வசந்தம் வீடு துறக்குமென்பேன்,
இப்போதெல்லாம் –
மாடி வீடுகளில் தான்
தென்றலே குடிபுகுந்துள்ளது என்கிறேன்;

சிலர் ஒரு மாற்றத்தோடு எனைப்
பார்கின்றனர்,
அன்று கேட்டவர்களுக்கும்
இன்று கேட்பவர்களுக்கும்
மாடியில் நீ நிற்குமழகோ பார்க்குமழகோ சிரிக்குமழகோ
தெரியாது தானே.. (?)!!
—————————————–
வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்