54 ஒரு தமிழனின் கனவு!!

நெல்மணிக்கும்
தேயிலைக்கும்
விவசாயம் பார்த்த
தமிழனமே; வாருங்கள்
ஊரெல்லாம் உறைந்துக் கிடக்கும்
ரத்தத்தில் –
எந்த உயிர் யாருடையதெனப்
பார்ப்போம்.

ஒருவேளை அது –
என்னுடையதாய் இருந்தால்
மீண்டுமென்னை உயிர்பித்து விடுங்கள்
ஈழம் வெல்லும் வரை மட்டும்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

53 ஒரு தமிழனின் கனவு!!

லக தமிழினங்களே
வாருங்கள் –
ஒரு வாரம்
ஈழத்தில் தங்கி
இறந்த போராளிகளின்
உடம்பு கறி கிடைக்கும்
தின்று –
விடுதலை உணர்வை
மீட்டுக் கொள்ளுங்கள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

52 ஒரு தமிழனின் கனவு!!

குண்டு வெடி
சப்தத்திற்கோ
பீரங்கியில் சிதைந்து போகும்
மரணத்திற்கோ
பயமில்லை;

இறந்து கொண்டிருப்பது
வெறும் போராளிகள் மட்டுமல்ல
எங்களின் நம்பிக்கையுமென்பதே
பயம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

51 ஒரு தமிழனின் கனவு!!

றந்தவர்களுக்கு
இறந்த பின்பும்
நிறைய கடிதங்கள்
எழுதப் படுகின்றன;

பதிலாய் வரும்
அத்தனை கடிதத்திலும்
ஒற்றை சொல்லே
வருகிறது; மீண்டும் மீண்டும்
போராடுங்கள்..
போராடுங்கள்..

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

50 ஒரு தமிழனின் கனவு!!

துவரை
வீடிழந்து
நாடிழந்து
விடுதலை தேடி திரியும்
எம் உறவுகளே;

உயிரை
யாருக்கு வேண்டுமாயினும்
விட்டுவிடுங்கள்;

விடுதலை உணர்வை –
ஈழத்திற்கு மட்டுமாய்
மிச்சம் வையுங்கள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக