Tag Archives: உலகம்

அரைகுடத்தின் நீரலைகள் – 17

மதம் ஜாதி ஏன் இனம் கூட உன்னை தாண்டி பிறரையும் வளர்க்குமெனில் வைத்துக் கொள்; அது உன்னையல்ல பிறரை பிறர் உணர்வை பிறர் வாழ்வை ஒடுக்குமெனில் உன்னையும் சேர்த்துக் கூட கொன்று முடி மதவாதம் ஜாதிவெறி இனவெறி அறு மனிதம் நிலைக்கும் வரை மட்டுமே அவைகளில் பற்று கொள்!! —————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 16

மதம் தேவையென்று நான் எழுதியதுண்டு, அதனால் என் கைகளை இப்போது முறித்துக் கொள்ள முடியவில்லை, நான் சொன்ன தேவை; மனிதனை மனிதனாக வைத்திருக்கும் வரையில் மட்டும், அல்லது வைத்திருக்க மட்டும் – மதங் கொள்ளும் வரை’க்கல்ல! ——————————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 15

ஜாதி மதம் இனம் ஏழை பணக்காரன் தொழில் பிடித்தல் பிடிக்காதது என ஏதோ ஒரு புள்ளியில் சந்தித்தும் சார்ந்தும் கொள்கிறான் மனிதன்; மனிதம் தோற்கும் காரணி அங்கேயிருந்து முளைவிடுகிறது! ———————————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 14

காற்றுபுகும் புகும் இடைவெளிக்குள் புகுந்துவிடுவது போல் புகுந்து விடுகிறது எனக்கான சுயநலம்; அறுத்தெறிய இயலாமையில் வீட்டிலிருந்து உறவிலிருந்து நட்பு தாண்டி தேசம் தாண்டி கடவுள் வரை ஏற்பட்டது விரிசல்! ————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 13

ஏதேனும் ஒரு முகம் நினைவுபடுத்தி விடுகிறது உன்னை, ஏதேனும் ஒரு முகம் நினைவுபடுத்திவிடுகிறது என்னையும், ஆழ சிந்தித்தலில் எல்லோரும் எங்கோ ஓரிடத்தில் கலந்தே இருப்பதை உணரத் தான் காலம்; மரணம் வரை நீள்கிறது! —————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக