Tag Archives: ஐக்கூக்கள்

30 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

ஓடி வந்து மூச்சிரைக்க உன்னருகில் வந்து நின்றேன் என்ன என்றாய் இதோ இது ஒரு புது நாவல் சாண்டில்யன் எழுதியது படி என்றென்.. “ஹே…. கள்ளா.. பொய் தானே சொல்ற – உள்ளே என்ன காதல் கடிதமா…??!!!” என்றாய்… எழுதி வைக்காமல் போனேனே என மனசு அப்படி துடித்தது! —————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

29 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

எங்கேனும் ஒரு பக்கத்தில் புரட்டிப் பார் உன்னிடம் சொல்லவேண்டிய ஒன்றை எழுதியிருக்கிறேன் என்றென் புத்தகம் முழுதும் புரட்டிவிட்டு ஏமாற்றத்துடன் இல்லையே’ என்றாய். உனக்குள் ஏதோ இருப்பது எனக்கு இந்த கணத்தில் உறுதியானது! ——————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக