Tag Archives: கவிதைகள்

இது ஒரு கவியரங்க கவிதை, தலைப்பு: ‘கவிதையில் காதல்’

சொக்கவைக்கும் தமிழில் சொக்கித் தான் போனது காதலும்; சொக்கித் தான் போனேன் நானும் சொக்கவைத்தவள் அவள்! அவளொரு – மரத்த தமிழச்சி, அந்த மரத் தமிழச்சி பற்றிய கவிதையில் இதோ..யென் காதலிங்கே களம் கொள்கிறது.. தெருவெல்லாம் நெட்டையாய் நின்ற பனைமரக் காலமது, வாய்ஜாலம் விற்று தண்ணீர் பிடிக்கும் ஒற்றைக் குட ‘நீருக்கான பஞ்சமது, அந்தக் குழாயின் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

16 சிறை; கொடுத்துவைத்தது சீமானே………..!

இளமை கனவுகளை ஈழத்தில் தொலைத்தவரே, விடுதலையின் எழுச்சிக்கு எட்டுதிக்கும் பறந்தவரே, ஈழதேசம் என் நாடென்று எல்லை தமிழனுக்கும் சொன்னவரே, எம்மின மக்களுக்காய் தன்னலம் துறந்தவரே, அண்ணன் தம்பி நீயென்று என் சனத்தொட வாழ்பவரே, லட்சியம் ஒன்றென்று சத்தியம் காத்தவரே, கத்தி கத்தி பேசி பேசி எம் அடையாளம் மீட்டவரே, சுட்டெரிக்கும் வார்த்தையினால் எதிரியை சுண்டி; சுண்டி … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

15 செஞ்சோலை மறக்கும் வரை; ஓயாதீர்………உறவுகளே!!

செஞ்சோலை தெருவெல்லாம் புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே; தமிழ் படித்த சிறுமியின் குரல் சப்தம் தொலைத்து கிடக்கிறதே; பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம் மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே; மறக்க இயலா மரணச் சூட்டின் – மண்டியிடவைத்து அவன் சுட்ட வெடி சப்தத்தின் – சற்றும் மனிதம்பாரா எம் குலமழித்த வெறியில் – முளைத்தெழு உறவுகளே; அடிப்பவனை மன்னிக்கலாம் அவனே … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வணக்கக் கவிதைகள்; முகநூல் தோழி லல்லிக்கு சமர்ப்பணம்!

பூங்காற்றின் வாசத்தில் என் பெயரெழுதி வைப்பதற்கு பதிலாக உன் பெயரை பரிந்துரைக்கிறேன்; நட்பின் வாசம் – பூங்காற்றெங்கும் பரவட்டும்!! இனிய அன்பு வணக்கம்! ———————————————————————– வீழும் நட்சத்திரங்களாய் இன்றி வாழும் நிலவினை போல் கொண்ட நட்பே.. நல் – இரவு வணக்கம்! ———————————————————————– மீட்டுமொரு வீணையின் இசையாய் உள்ளே ஒரு பாடல் கேட்டுக் கொண்டே இருக்கிறது, … Continue reading

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | Tagged , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 25

ஒரு மனிதன் பிறக்கையில் பிறக்கிறது மரணமும் மனிதனோடு வளர்கிறது மரணமும் மரணத்தை கொன்று கொன்று வென்று விட்டதாய் எண்ணும் நாளில் மரணம் மனிதனை நெருங்குவதை மனிதன் அறிவதுமில்லை, மனிதன் அடங்குவதுமில்லை! ————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்