Tag Archives: கவிதைகள்

அரைகுடத்தின் நீரலைகள்.. (1)

எவனெவனோ கேட்டானாம் லஞ்சம் கொடுத்தது நீயும் நானும் செய்த வஞ்சம், ஊரெல்லாம் நடக்கிறது கொள்ளை வீட்டில் சேர்த்த சுயநலத்தின் தொல்லை, காலமெல்லாம் பரிதவிக்கிறான் மனிதன் மனிதம் மறக்கப் பட்ட இரும்பன், உலகெல்லாம் கொட்டிக் கிடக்கிறது வாழ்க்கை எதற்கெல்லாமோ அஞ்சித் தவிக்கிறது மனசு, செய்யாத கொடுமைக்கு இல்லை தண்டனை செய்த தவறிலிருந்து இல்லை தப்பித்தலும், உடம்பெல்லாம் ஆசையும் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அனைத்து; உயிர் சுமந்த நட்புறவிற்கும் – வித்யாசாகர்!

காதலின் காதலை பகிர்ந்தும் காதலை கலக்காத நட்பில், அண்ணன் தங்கை ராக்கி கட்டாத நட்பில் இறுகிய மனதில்; சற்று அதிர்ந்து பேசியதற்கு கூட பிறகுவருந்தி தோளனைத்துக்கொண்ட பண்பில், உதவிக்கு முன்னிலாவிட்டாலும் ஆபத்தில் பின்னிற்க இயலாத நெருக்கத்தில்; வாழ்வின் சுவரெல்லாம் இதயத்தின் பலமாக பூசிய உறவில், உயிர் பதிக்கும் அன்பின் நகரும் தெருவெலாம் நட்பு நட்பு நட்பென்றே … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

அன்பு தம்பி விஜய ரூபனுக்கு வாழ்த்து!

மனசார அன்பை விதவிதச்சி என் மனசெல்லாம் விதைச்ச தம்பி, கவிதை படிச்ச அன்பால உடன் பிறக்காமல் உற்ற தம்பி; வானம் போல மனசால ஞானம் – கூட நிரஞ்ச தம்பி, இனம் காக்கும் உணர்வுள்ள எழுச்சிக் குறையா நல்ல தம்பி; இணையத் தாய் கொடுத்த உறவில் ஈழ மண்ணை போற்றும் தம்பி என் இனம் காக்க … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

21 தெருவை கடந்த பெரியவர்; விபத்து!

தெருவில் விபத்தாம் கூட்டம் விளக்கிப் பார்த்தேன் உலகத்தின் மொத்த உறவையும் அறுத்துக் கொண்டு விடை பெரும் தருணத்தில் ஒரு பெரியவரின் உயிர் இழுத்துக் கொண்டிருந்தது. அவசர அவசரமாக ரத்தம் சொட்டும் அவர் உடலை ஏற்றிக் கொண்டு போக ஆம்புலன்ஸ் வந்து நிற்கிறது. அவரின் மூக்கு கண்ணாடி மட்டும் தள்ளி சற்று தூரத்தில் நசுங்காமல் கிடந்தது. ஒன்றுமில்லை … Continue reading

Posted in உடைந்த கடவுள், கவிதைகள் | Tagged , , , , , | 8 பின்னூட்டங்கள்

35 உனக்கும் எனக்குமான காதல்; ஊரெல்லாம் பன்னீர் தெளித்த காலம்!

எழுத எழுத இசையானாய்.. எழுதாமலே கவியானாய்.. உயிரென்று சொல்லி உறவானாய்.. உறவில் – காதல் நட்பு தாண்டி ஏதேனும் ஒன்று புனிதாமாகுமெனில் – அதுவாக கரைவோம் வா!! ——————————————————-

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக