Tag Archives: கவிதைகள்

பிரிவுக்குப் பின் – 72

உன் – கால் கொலுசும்.. கை வளையல்களும்.. சொல்லிடாத – சேதி கேட்டும்; சொன்ன – இரவுகளை நினைத்தும் தான் நகர்கிறது – வாழ்வினிந்த – அர்த்தமற்ற நாட்கள்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (41)

நீ வயிற்றிலிருக்கும் ஐந்தாறு மாதத்தில் உன்னம்மா வயிறு தொட்டு தொட்டுப் பார்ப்பாள், அசையத் துவங்கிவிட்டாய் என்பாள், எங்களின் அத்தனை வருடக் காத்திருப்பும் பறக்க ரக்கையை விரித்துக் கொண்ட கணமது, நானும் எங்கே பார்கிறேனெனத் தொட்டுப் பார்ப்பேன், உன் அசைவுகளை என் வாழ்வின் அர்த்தமாய் அறிந்துக் கொண்ட பொழுதுகளது. இன்று – இதோ எதிரே நிற்கிறாய் கை … Continue reading

Posted in கவிதைகள், ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

46 எம் வீர காவியம் நின்னு கேளுடா; ஈழம்!

எம் வீர காவியம் நின்னு கேளுடா ஈழமுன்னா வெறும் மண்ணு இல்லைடா.. புலி கொடி பறந்து ஆண்ட தேசம்டா உலகை; இன்றும் தாங்கும் ஒற்றை இனமடா! பெண்ணைத் தாயென பார்த்த பூமிடா வந்தவரெல்லாம் வாழ்ந்த மண்ணுடா; பொண்ணும் பொருளும் நிறைந்த சொர்க்கம்டா போட்டதை எல்லாம் விளைத்த வர்கம்டா..! காலம் ஏனோ மாறி போச்சிடா கயவர்களாலே ஆடி … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஞானமடா நீயெனக்கு – 39

நீ முதன் முதலில் வெளிச்சத்திற்கு வந்து சூரியனை பார்த்து கண் கூசுகிறதென – கண்களை மூடிக் கொண்டு திறக்க இயலாமல் தவிப்பும் சிரிப்புமாய் நிற்க, நானும் அம்மாவும் உனை ‘ஹே…எனக்.. கிண்டலடிக்க, நீ கண்களையும் திறக்க முடியாமல் முடியவில்லையே எனும் இயலாமையையும் மறைக்க முயன்று சிரித்து மழுப்பிய அழகை எந்த புகைப்படத்தில் பதிந்து வைப்பேன்???? பதிய … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 38

சிலநேரம் அம்மா அம்மா என்றழுவாய்.. அம்மாவிடம் தந்தாலும் அப்பா அப்பா என்றழுவாய்., நானும் எனக்காக அழுகிறாயோ என்றெண்ணி தூக்கி மார்மேல் போட்டு தட்டுவேன் நீ இன்னும் கதறி அழுவாய்.., ஒன்றும் புரியாமல் மீண்டும் – அம்மாவிடமே தருவேன்.. என்ன செய்வதென்று புரியாமல் எப்படியாவது உன் அழையை நிறுத்தும் எண்ணத்தில் – அவள் உருக உனை அனைத்துக் … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக