Tag Archives: குடும்பக் கவிதைகள்

பிரிவுக்குப் பின் – 74

உனை விட்டுப் பிரிந்து வருடம் ஒன்றை கடந்த பின்பும் – இன்று என் சட்டையை கழற்றினாலும் அங்கங்கு சற்று – முகர்ந்துக் கொள்வேன்; எங்கேனும் உன் வாசம் மிச்சமிருந்து விடாதா!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 73

இப்பொழுதெல்லாம் நான் – தனியாகத் தான் – இருக்கிறேன்; ஆம்! நீயில்லாத உலகத்தோடு நான் பேசுவதேயில்லை!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 72

உன் – கால் கொலுசும்.. கை வளையல்களும்.. சொல்லிடாத – சேதி கேட்டும்; சொன்ன – இரவுகளை நினைத்தும் தான் நகர்கிறது – வாழ்வினிந்த – அர்த்தமற்ற நாட்கள்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக