Tag Archives: குறுங்கவிதை

அரைகுடத்தின் நீரலைகள் – 21

எங்கெங்கோ சுற்றி மீண்டுமாய் நான் வந்து நிற்குமிடம் ஒன்று கடவுள் மற்றொன்று மரணம்; இல்லை இல்லை கடவுள் இல்லை எனில் மரணமாக மட்டுமே போ, மரணத்தில் மிஞ்சும்; கடவுள் இருப்பதான பயம் அல்லது மரணத்தில் மரணிக்கும் கடவுள் இருக்கும் இல்லாத நம்பிக்கை!! ————————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 20

மனதை உன்னால் திறந்துவைத்திருக்க இயலுமெனில் கோவிலொன்றும் பெரிதில்லை மூடிக் கொள்! ————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 19

உலகம் கொட்டக கண் விழித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை காண்பதற்கும் ஒரு கண் வேண்டும் தெளிவெனும் கண்; அல்லாது யாருக்கும் தெரியாதெனத் தோண்டும் குழிகள் நாளை நமக்காகவும் திறந்தே இருக்கும்! ————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 18

ஒரு சின்ன ஊரில் தெருவில் வீட்டில் பிறக்கிறது ஒரு தேசத்திற்கான வன்முறை. வீடுகள் சரியெனில் நாடும் சரி! ————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 17

மதம் ஜாதி ஏன் இனம் கூட உன்னை தாண்டி பிறரையும் வளர்க்குமெனில் வைத்துக் கொள்; அது உன்னையல்ல பிறரை பிறர் உணர்வை பிறர் வாழ்வை ஒடுக்குமெனில் உன்னையும் சேர்த்துக் கூட கொன்று முடி மதவாதம் ஜாதிவெறி இனவெறி அறு மனிதம் நிலைக்கும் வரை மட்டுமே அவைகளில் பற்று கொள்!! —————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக