Tag Archives: தேசக் கவிதைகள்

37 வரிசையில் நிற்கிறார்கள்; வாழ்வை தொலைக்கிறார்கள்!

‘விடையிராதா நீண்ட கேள்விகளால் நிறைகிறது – எதற்கெதற்காகவோ காத்திருக்கிற மனசு.. ‘நீண்ட பாலை நிலங்களில் காய்ந்த புற்களை போல் தொலைத்திட்ட ஆசைகள் மரணத்தை மட்டும் மிச்சம் வைத்துக் கொண்டு எல்லாவற்றிற்குமாகவும்; காத்திருக்கவே செய்கிறது.. ‘வருடத்தில் பூக்கும் வளைகுடாவின் பசுமையை போலன்றியும் வருடங்களிரண்டில் பார்த்து வந்த குடும்பத்து முகங்கள் தூரத்தின் இடைவெளியில் – சிக்கிக் கொண்ட பாரங்களாகவே … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 20

மனதை உன்னால் திறந்துவைத்திருக்க இயலுமெனில் கோவிலொன்றும் பெரிதில்லை மூடிக் கொள்! ————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 19

உலகம் கொட்டக கண் விழித்துப் பார்த்துக் கொண்டிருப்பதை காண்பதற்கும் ஒரு கண் வேண்டும் தெளிவெனும் கண்; அல்லாது யாருக்கும் தெரியாதெனத் தோண்டும் குழிகள் நாளை நமக்காகவும் திறந்தே இருக்கும்! ————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 18

ஒரு சின்ன ஊரில் தெருவில் வீட்டில் பிறக்கிறது ஒரு தேசத்திற்கான வன்முறை. வீடுகள் சரியெனில் நாடும் சரி! ————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 17

மதம் ஜாதி ஏன் இனம் கூட உன்னை தாண்டி பிறரையும் வளர்க்குமெனில் வைத்துக் கொள்; அது உன்னையல்ல பிறரை பிறர் உணர்வை பிறர் வாழ்வை ஒடுக்குமெனில் உன்னையும் சேர்த்துக் கூட கொன்று முடி மதவாதம் ஜாதிவெறி இனவெறி அறு மனிதம் நிலைக்கும் வரை மட்டுமே அவைகளில் பற்று கொள்!! —————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக