Tag Archives: தொழிலாளி

முதிர் கன்னர்கள்..

அவர்கள் முப்பதைக் கடந்தவர்கள் நாற்பதைத் தொட்டவர்கள் சாபமின்றி வாழ்க்கையை நாளும் தொலைத்தவர்கள்.. மணக்கும் மல்லிகையின் வாசம் ரசிப்பவர்கள், மணக்கா பெண்ணெண்ணி கனவினுள் வீழ்ந்தவர்கள், கடவுளை கைதொழா காதலின் பக்தர்கள் காலில் உதைத்து கடவுளையும் சலிப்பவர்கள்; கோவிலே கதியென்று நாளும் திரிபவர்கள் காட்சிகளின் மாட்சியில் குடும்பத்தைப் பார்ப்பவர்கள்; வாழ வரும் பெண்ணுக்குக்கூட வரையறை வைத்திருப்பவர்கள் வாழும் வாழ்க்கையை … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வாழ்க தமிழ் பேசுவோர்..

வாட்ச் பக்கெட் தேங்க்ஸ் சாரியிலிருந்துத் துவங்குகிறது தமிழிற்கான தினக்கொலை.. அம்மா அப்பா மாறி மம்மி டாடியானது மட்டுமல்ல டிவி ரேடியோ கூட வெகுவாய் தமிழை தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது; சுடுகாட்டுப் பிணத்தைக் கூட டெட்பாடி ஆக்கும் ஆசையை எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால் என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க தமிழாகித் தொலையுமோ… (?) எவனோ எடுத்தெமைப் புதைக்கும் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மூடியக் கழிவறையும்; திறந்திருக்கும் நோயின் கதவுகளும்..

அந்தம்மா பாவம் உணவுண்ணும் முன்கூட அலசி கழுவிவிட்டாள் அந்தக் கழிவறையை; அடுத்தடுத்து அதை மிதித்து நோயுக்கு வழிவிட்டோர் நீயும் நானுமில்லையா? அவருக்கும் நமக்குமிருக்கும் அதே கைகள்தானே உனக்கும் எனக்குமாய் தினமும் கழிவறை துடைக்கிறது? அவரவர் வேலையை அவரவர் செய்யின் எவருக்கு வேலை வரும் எவனெவன் காலடியோ கழுவ? நாற்றம் என்று நாம் மூக்கடைக்கும் முன்பே மூனு … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

17) சமைக்கிறவன் சொல்லாதக் கதை…

நாலுச் சுவத்துக்குள்ள வாழ்க்கைதாங்க – எங்க கட்டில்சுகமும் கனவுலதாங்க, சம்பளமெல்லாம் பெருசுதாங்க – அதைச் சம்பாதிச்சும் வாழ்க்கை நெருப்பிலதாங்க; சுட்ட பணம் பளபளக்கும் – மிளகாய்ச் சிவப்பாய் நாட்கள்கூடக் கடக்கும், அனல்’ல வெந்து சாகும்வரை – நாங்க சமைக்கும் சோறு மணமணக்கும்; நொந்த மனசு நெடுநாள் வலிக்கும் – கரண்டி துழாவி’ தெரியும் முகங்களைப் பார்க்கும், … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்