Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்

19) என் தேசம் தூயதேசம்…

ஒரு தேச வளர்ச்சி என்பது ஒரு ஏழையின் கண்ணீரைத் துடைப்பதாய் இருக்கவேண்டும். ஒரு பாமரன் படித்து மேதையான கதை அந்த தேச வளர்ச்சியின் வரலாற்றில் இடம் பெற்றிருக்கவேண்டும். அரசியல் சட்டங்களும் அரசியல் வாதிகளின் போக்கும் மக்களின் நலன் கருதி அமைந்திருக்கவேண்டும். அப்படியிருக்கிறதா நம் தேசம்? எனும் கேள்விதாங்கிய கவிதையிது. தலைப்பு ‘என்’ தேசம் தூயதேசம்.. ஆம் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

கவிதாயினி திருமதி ராணிமோகனின் கவிதைகள்..

ஈழத்தை அவள் பார்ப்பாள்; மோனா லிசா!! பெண்களில் பேறு பெற்றவளே பேசாமல் பேசும் ஓவியமே சித்திரதிற்குள் சிதைந்திடாத, பேரழகே நீ கற்பனையில் விளைந்தவள் அல்ல; லியானர்டோ டாவின்சின் கண்களில் பதிந்து, இதயத்திற்குள் பிம்பமாகி பிறந்தவள். பாரிஸ் நகரில் – உன்னை ஒளிந்திருந்து பார்க்க நினைப்பவர்களையும் நீ ஓர கண்களால் பார்த்து விடுகிறாயமே.., அப்படி என்ன உன்னிடம் … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

குவைத்தின் ஈரக் காற்றில் எழுப்பப்பட்டன, மாவீரர்களுக்கான மீண்டுமந்தக் குரல்..

ஆயிரம் கைகளை விரித்துப் பறந்துக் கொண்டிருந்த பாலைவனக் காற்றின் குளிரின் நடுக்கத்திற்கிடையே அந்த இதயங்கள் விடுதலையின் வெப்பத்தையே முழுக்கச் சுமந்துக்கொண்டு மாவீரர்களைப் பற்றிய நினைவுகளையெல்லாம் அலசி’ மீண்டும் கேட்போர் மனங்களில் விதைத்துக் கொண்டிருக்க, உணர்வுகளில் தகித்துத் தகித்து ஈழக் கனவினை எல்லோர் எண்ணத்திலும் சமைத்துக் கொண்டிருந்தது அந்த நிகழ்வு.., அந்த அரங்கம். குவைத் தமிழர் கூட்டமைப்பின் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே..

தமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே… காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே… தமிழினமே… தமிழினமே… என் தமிழினமே… எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

18) பெண்களைத் தேடும் கண்கள்..

கண்குத்திக் கிழிக்கும் பார்வைகளில் வடிகின்றன காமப்பசிக்கான ரத்தம், இரத்தம் சுவைக்கும் மிருகக்கடலில் விட்டில்பூச்சிகளென விழுந்து – உடலாசைநெருப்பில் கருகிப்போகின்றன பல பெண்களின் முகங்கள்; பச்சைப் பச்சையாய் மணக்கும் – அம்மா அக்காத் தங்கைகளின் வாசமருத்து, எப்படி ருசிக்கிறதோ அந்த வெறும் தசையும் வளைவுகளும் உரிமையில்லாப் பார்வையும்; மனதை ரணமென வலிக்கச் சுடும் – குற்றவுணர்வை கசக்கியெறிந்துவிட்டு … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்