Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்

44 அரைகுடத்தின் நீரலைகள்..

நானும் என் தம்பியும் தெருவில் நடக்கிறோம் அவன் எதிரே வரும் போகும் பெண்களை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வருகிறான் ஐயோ இப்படிப் பார்கிறானே என்று உள்ளே சற்று வலிக்கையில் – என் சபலமும்; எனை காரி உமிழ்ந்தது! ————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

43 அரைகுடத்தின் நீரலைகள்..

என் தவறுகளுக்கு தண்டனையாக தோல்வி வேண்டாம்; வேண்டுமெனில் – மரணம் கிடைக்கட்டும்! ——————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

42 அரைகுடத்தின் நீரலைகள்..

வாசலில் பூத்த மலர்களில்; நிறைய மலர்கள் எனக்கானதல்ல!! ———————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

41 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

வாழ்வின் சுவர்களில் கொட்டை எழுத்தில் எழுதப் படுகிறது மரணம்; படிக்க மட்டுமே நாளாகிறது! ————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

40 மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!

எத்தனையோ பேரின் மரணத்தில் நிகழ்வதில்லை பாடம்; என் வீட்டின் ஒரு சின்ன மரணம் மாற்றி விடுகிறது என் பாதையையும் வாழ்க்கையையும், வாழ்க்கையை கடைசியாய் புரட்டும் நாளில் பாடம் புகுத்தப் பட்டுள்ளது புரியும் புள்ளியில் நிகழ்கிறது – தனக்கான மரணம்! ———————————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக