Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்

34 அரைகுடத்தின் நீரலைகள்..

என் தாத்தா பாட்டி சிரித்த சிரிப்பு என் தம்பிகள் தங்கைகள் வளர்ந்த வளர்ப்பு ஒரு புகைப்படமாக மட்டுமேனும் மாட்டி வைக்கப் பட்டுதான் இருக்கிறது; கூட்டு குடும்பத்தில்! —————————————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

33 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

நேரில் இன்னும் அவர் இருப்பதாகவே பொய் சொல்கின்றன சிலரின் மரணங்கள்; சிலரின் மரணத்தை நம்புவதும் ஏற்றுக் கொள்வதுமே இல்லை மனசு; வேண்டுமெனில் அழுபவரை பார்த்து ஆறுதல் சொல்லிக் கொள்ளளாம் என்றாலும் அவைகளை கடந்தும் வலிக்கிறது மனசு – வாழ்தலின் கட்டாயத்தில்; மரணமாயிற்றே!!! வேறென்ன செய்ய????!! எழுதியும்; தீர மறுக்கிறதே; மரணம்!! ——————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

32 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

இறந்தும் வாழ்வதாய் நம்மோடு இருப்பதாய் அவர் புகழ் நிலைப்பதாய் ஆயிரம் சொல்லிக் கொள்ளளாம், மீண்டும் – பார்க்க தொட பேச அருகாமை கொள்ள; ஏன், தூரத்தில் கூட ‘இல்லையே’ என்ற உண்மையை யாரால் மாற்றிட இயலும்? எப்படியோ இறந்தவர் உயிரோடில்லை என்ற ஒற்றை சொல்லிலிருந்து வலுக் கொள்ளும்; மரணத்தின் கொடுமையை அழுகையை; யாராலும் அகற்ற முடிவதில்லை!! … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

31 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

கவிதை கண்ணீர் உறவுகளின் ஆறுதல் எல்லாம் தோற்கிறது மரணத்திடம், இறப்பதை விட இறந்தவரோடு இருப்பது வெகு கடினம்! ————————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

30 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

நம்பவே முடியவில்லை சிலரின் மரணத்தை, யார் யார்..? என்று..? எங்கெங்கோ…………?!!!!!!!! ஒன்றுமே உறுதியில்லை, என்பதும் நினைவில் இருந்தே தொலைவதில்லை, மரணம் மட்டும் தவறாமல் நிகழ்ந்து விடுகிறது – அது நினைக்கும் நாளில்!! ———————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக