கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் – 2

images

நான் வரும்போதெல்லாம்
உனக்காக ஒரு
மலர் வாங்கி வருவேன்

நீ எனைக் கண்டிராத இடத்தில்
அந்த மலர்களை
விட்டுச் செல்வேன்
மலர்களை தாண்டிச்
செல்வாய் நீ,
உனக்கந்த மலர்கள் அழுவதாக
சத்தம் கேட்டிருக்கும் போல்;

நீ திரும்பிப்
பார்ப்பாய்,
சற்று தூரம் சென்று
மீண்டும் மீண்டும்
அந்த மலர்களைப் பார்த்தவாறே போவாய்..

மலர்களும்
மெல்ல அழத்துவங்கும்..

அந்த மலர்களுக்குத் தெரியும்
உன்னையும் என்னையும்
——————————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in கவிதைகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக