Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

ஞானமடா நீயெனக்கு – 20

படுக்கையில் – தலையணை, மெத்தை போர்வைக்குப் பின்னும் உன் புதிய வருகையால் ஏற்பட்ட சின்ன இடைவெளியை, இருவரையும் சேர்த்து நீ அனைத்துக் கொண்ட இறுக்கத்தில் – நீயாகவே; தீர்த்துக் கொண்டாய்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 19

பை நிறைய சுமந்த உன் – புத்தகமாகத் தான் முழுதும் படிக்கமுடியாமலே கனக்கிறாய் எனக்குள்ளும் நீ!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 18

வேலைக்கிடையிலும் உனை நினைக்கும் பொழுதிலும் நீ என்னோடில்லாத – இடைவெளிக்குள்ளும் கேட்டுக் கொண்டு தானிருக்கிறது; நீ – அப்பா அப்பா என்றழைக்கும் அந்த இனிய குரல்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

மரணத்தை மீட்டெடுப்போம் (26)

இரண்டற கலக்காத நெஞ்சில் வஞ்சமற்று வாழ்கையில், கெடுத்தவனை திருத்த முயல்கையில், அடித்தவனை திருப்பி அடிக்கவும் – அணைக்கவும் முடிகையில், அன்புருதலில், இல்லாதாரிடம் இருப்பதில் – இயன்றவரை பகிர்ந்து கொள்கையில், இருப்பவரை கண்டு ஏங்கி நிற்காமையில், எத்துணிவு பெற்றும் பணிவுருகையில், பணிபவரை மதிக்க கற்கையில், மதியாதாரை புரிந்து கொள்கையில், தவறென்று கண்டால் பொங்கி எழுகையில், தன் தவறாயினும் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 10 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 60

கனவில் நீ – வருகிறாய், கனவிலிருந்து தொடரும் உன்னையுமென்னையும் பிரித்த சோகம்- கனவுக்கு பின்னும் நீள்கிறது; காலத்தின் கைகளில் நீயும் நானும் எப்பொழுதும் – பிரிந்தே பிரிந்தே கணவனும் மனைவியுமாக!!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்