Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

ஹைக்கூ – 124

தொலைபேசியில் கத்தி கத்தி பேசினாலும் மனதின் சப்தம் யார் காதையுமே தொடுவதில்லை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 123

பயித்தியம் பிடிக்காத நாட்களை – இப்படித் தான் எழுத்துகள் மென்று தின்றுவிட்டு தன்னை கவிதை என்று அறிவித்துக் கொள்கிறது!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 122

ஒவ்வொரு பிணமாய் வீழும்போதும் மனிதன் தன்னை சாகாவரம் பெற்றதாகவே நினைத்துக் கொள்கிறான்; மரணம் மட்டும் நிகழாதிருக்குமே யானால் மனிதன் கொள்ளும் முதல் நபர் கடவுளாகவும் இருக்கலாம்!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 121

செரிப்பதற்கு இனிப்பும் ரசமும் சோடாவும் குடிப்பவனுக்கு பசிப்பவனை பற்றிய சிந்தனை அற்றுப் போன இடத்திலிருந்தே முளைத்துக் கொள்கிறது உலகின் அத்தனை போராட்டங்களும்!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் – 3

குழந்தை கையோடு புத்தகம் நீளப் பயணங்களில் நிறைவில்லா தனிமைகளில் ஒரு புத்தகமோ இல்லை ஒரு கைக்குழந்தையோ என் கையில் தவழ்ந்தால்-எனக்கு போதுமாயிருக்கும்; இரண்டுமே… சூலடைந்து கருசுமந்து வெளிவந்த படைப்புகள்தானே…! இரு கையில் ஏந்தி எடுக்க இதழ் திறக்க உச்சிமுகர ஒரு நிமிடம் தியானிக்க…அந்த பாலின் வாடைக்கும்- பச்சைத் தாளின் வாடைக்கும்- எனது தாயின் நினைவு உள்ளூறித் … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | பின்னூட்டமொன்றை இடுக