Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

நித்தியானந்தா + நாம்

கிறுக்கு – மனோபாவத்தின் தந்திர வித்தைகளில் மறைந்த வக்கிரத்தை காவி மறைத்துக் கொண்ட தைரியத்தில் எதையோ பொய்யென்றும் எதையோ உண்மையென்றும் நம்பிவிட்ட கண்கட்டப் படாத பொதுமக்களின் குருட்டு நம்பிக்கையில் காலம் காலமாய் காம நெருப்பிட்டு உறங்கியவனின் மோக மெத்தையில் – எவர்வைக்கும் தீயும் அவன் தலைமுடியை கூட சுடவில்லை! ————————————–

Posted in கவிதைகள் | 8 பின்னூட்டங்கள்

இருப்பவன் இல்லாதவனைவிட சிறியவன்!

நிறைய அலமாரிகளில் பணம் அடுக்கப்பட்டு வயிறுகளில் பசி இறுகக் கட்டி பட்டில் ஆடையுடுத்தி மாற்றுப் புடவைக்கு பிச்சையெடுத்து விமானத்தில் நடுக்கடலில் பட்டப்பகல் – நட்டநடுத் தெருவில் வாகன நெரிசலுக்கிடையே திருமணம் நடத்தி முதிர்கன்னிகளை ஆங்காங்கே திரியவிட்டு பெண்களின் கற்பு பேசி விலைமகள்களுக்கு – வீடமைத்துக் கொடுத்து ஜனநாயக தேசமென மார்தட்டி – எடுத்ததற்கெல்லாம் ஜாதி கேட்டு … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | 2 பின்னூட்டங்கள்

சிறுதுளி பெருவெள்ளமென ஒன்று சேர்வோம்; வாருங்கள் தோழர்களே!

கொட்டிப் பெறாதவர் மனம் தான் எட்டித் துடிக்கிறது எல்லோருக்கும் உதவ. தேசம் எதுவாயினும் என்ன உயிர் விலைமதிப்பற்றது தானே, எனில்; வாருங்கள் ஒருமுறை மீண்டும் ஒற்றுமை கொள்வோம். ஒரிசாவை சேர்ந்த சகோதரி ஜெயஸ்ரீ என்பவருக்கு இரத்தப் புற்றுநோயாம். முற்றிலும் குணம் பெற ஒரு கோடி வரை ஆகுமாம். இருபத்தைந்து லட்சம் வரை தயாராகிவிட்டது. இன்னும் எழுபத்தைந்து … Continue reading

Posted in அறிவிப்பு | 3 பின்னூட்டங்கள்

குடும்பத்துடன் பயணம் செல்கிறோம்!

அன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். தங்கள் அனைவரின் பேராதரவிற்குமான மிக்க நன்றிகளை முதர்கண்ணாய் தெரிவிக்கிறேன். சென்ற மாதம் நடந்தேறிய தம்பியின் திருமணத்தை முன்னிட்டு, மலேசியாவில் ஒரு விருந்துபசரிப்பு விழாவினை வைத்துள்ளார்கள் சகோதரியின் (தம்பி மனைவி) வீட்டார். அதில் கலந்து கொள்ளும் பொருட்டு சிங்கப்பூரில் உள்ள பெரிய தம்பியின் வீட்டில் தங்கிவிட்டு பதினான்காம் நாள் மலேசியா விழாவிலும் கலந்துக் … Continue reading

Posted in அறிவிப்பு | 2 பின்னூட்டங்கள்

வெற்றுப் பிணம் நாம்!!! (20)

மனதின் – நீள அகலங்களில் எத்தனையோ, கண்ணீரின் சாரல்கள்; வெளியில் தெரியாமல் உள்ளழுத்தும் வலிகளுக்கு எல்லோரும் மருந்திட்டுவிடுவதில்லை; எதையோ தேடி யாரையோ நினைத்து எங்கோ மனது கிடந்து அலையும் தருணங்களில் அழுதுவிடாத வருத்தங்கள் சுடத் தான் செய்கின்றன; வெற்றியை தலைமேல் சுமந்து எத்தனை தெருக்களில் நடந்துத் திரிந்தாலும் தோற்கும் வினாடிகள் வெற்றியின் சிகரத்தை வீழ்த்தாமலில்லை; என்ன … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 3 பின்னூட்டங்கள்