Category Archives: அம்மாயெனும் தூரிகையே..

ஊரெல்லாம் கவிதை தேடி அலைகையில், வீடெல்லாம் கிடைத்த கவிதை ‘வீட்டுப் பாடம்’, என்னை சுற்றியிருப்பவர்கள் தந்ததும்; நான் பார்த்து வெந்ததுமான தலைப்புகளால் முடியப் பட்டதிந்த தொகுப்பு.

கவிதை எழுதுகையில், வீட்டு பாடம் எழுதுகிறான் பார், முடித்து விட்டு வருவான் சற்று பொரு என்று யாரோ ‘கவிதைகளில் நேரத்தை போக்குவதாய் எண்ணி’ சொல்கையில், ஆம்; இது என் வீட்டிற்குரிய பாடமும் தான் என்று ஏற்றுக் கொண்ட தலைப்பிது ‘வீட்டுப் பாடம்’

சிமினி விளக்கின் வெளிச்சத்தில்

இரவின் – இருட்டின் உள் கூரைக்கு மேலே படர்ந்த – சிமினி விளக்கின் வெளிச்சத்தில் விழுந்த இங்குமங்குமாய் நடந்துக் கொண்டிருக்கும் அப்பாவின் நிழலில் – அப்பாவின் மனமே தெரியவில்லை தான்; ஆனால், எனக்குத் தெரியும் நாளைக்கு அப்பாவிற்கு சம்பளம்; வீட்டு வாசலில் நின்று கழுத்தை நெரிக்கப் போகும் கடன் காரர்களுக்கு – என்ன பதில் சொல்வதென்ற … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக

சில யதார்த்தங்கள்

நிலா இரவில் நடைகொண்ட வாழ்க்கை; சிறிது வெளிச்சம் நிறைய இருட்டாகத் தான் நம் மெத்த பயணமும்; இடையே, மின்னும் நட்சத்திரமும் கால் தட்டும் கற்களுமாய் தெரிந்தும் தெரியாததுமென பல யதார்த்தங்களை கடந்தே மரணமென்னும் – ஒற்றை சொல்லில் நீயும் நானும் முட்டிக் கொள்கிறோம்; எப்படியோ, தவிர்க்க இயலா மரணம் தாண்டி காலம் நம்மை கேட்காமலே கடந்து … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | பின்னூட்டமொன்றை இடுக