Category Archives: அரைகுடத்தின் நீரலைகள்..

வாழ்ந்த அனுபவங்களும்.., வாழ்விற்கான தேவை இதெலாம் எனும் அனுமானமும், வாழ்தல் பற்றி சிந்திக்கவும், வாழ்க்கை பிறப்பு இறப்பு சம்மந்தமானதும்..

அரைகுடத்தின் நீரலைகள் – 9

தளும்பும் நீராகவே அலைகிறது மனசு உள்ளே வலியோ கவலையோ சிரிப்போ மரணமெனும் ஒன்றோ தேவைப் பட்டுக் கொண்டே இருக்கிறது! ———————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 8

உண்ணக் கொடுப்பதில் பிறர் தின்னக் கிடைத்தலும் தொந்தி ஒழித்தலும் புலன்கள் புரிதலும் வாழ்க்கை நெறி படுதலும் உண்டென்பது பட்டினியில் உள்ளவர்க்கும் ஈயாத புத்திக்கும் – ஒருகாலும் விளங்குவதில்லை! —————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 7

வாழ்க்கையை உலகை வெற்றிகளை யெல்லாம் சுண்டி ஒரு விரல் நுனியில் வைக்க மனசு போதும் என்று தெரிந்தோ தெரியாமலோ உணர்ந்தவர் தான் முன்னே நிற்கிறார்; புரியாதவர்கள் வாயை மூடிக் கொண்டு மனதை திறப்போம்; நாளையாவது – பின்னிருந்து முன் செல்லலாம்! ——————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 6

எத்தனை சாமி வந்தும் தன்னை நான் தான் சாமி என்று அடையாளப் படுத்திக் கொள்ள இயலாமையிலும் எப்படியோ நம்புகிறது மனசு சாமியை! —————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரைகுடத்தின் நீரலைகள் – 5

ஞானம் என்பது அறிவென்று பொருள் கொள்; அறிவு சிந்தித்தலில் மட்டுமல்ல செயலோடு சிந்தித்தலில் சிந்தித்து செயல் படுவதில் செயலுக்கும் அனுபவத்திற்கும் சிந்தனைக்கும் இடையே முடிவுறாத ஒன்றாய் மீண்டும் முளைக்கிறது. முடிவுற்ற அறிவு அதாவது முடிவுற்ற ஞானம் பேசுவதில்லை, பேசக் கிடைப்பதில்லை செயல்களாய் செயல்களில் கலந்துகொள்கிறது! கலக்காதவரை சப்தமிடுகின்றன அரைகுடத்தின் நீரலைகள்! ———————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்