Category Archives: அரைகுடத்தின் நீரலைகள்..

வாழ்ந்த அனுபவங்களும்.., வாழ்விற்கான தேவை இதெலாம் எனும் அனுமானமும், வாழ்தல் பற்றி சிந்திக்கவும், வாழ்க்கை பிறப்பு இறப்பு சம்மந்தமானதும்..

29 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

விழுந்து விழுந்து அழுகிறேன் இதற்கு முன் இறந்தவர்கள் கூட கண்ணீரில் சொட்டுகிறார்கள், பார்ப்பவர்களுக்கு – ‘நம் அழுகையின் சப்தம் மட்டும் – இறந்தவருக்காக அழுவதாக காட்டிக் கொண்டாலும் உள்ளே’ – இறந்த எல்லோரையுமே நினைத்தும் தான் அழுகிறது மனசு! ————————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

28 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

விழுந்து விழுந்து கத்தியழு மறக்கிறதா பார் மரணம்; மறக்காது, நிற்கிறதா பார் அழுகை நிற்காது, புரிகிறதா பிறப்பு இறப்பும் புரியாது, அதனாலென்ன வாழ்ந்ததாய் சொல்லிக் கொள்; மரணம் நீ இறந்ததாய் குறித்துக் கொள்ளும்! ————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

27 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

மரணமென்ன அப்பேர்பட்டதா என்று தான் எண்ணம்; ஆனாலும் தடுக்க முடியவில்லை மரணத்தை, படக்கென பிடுங்கிக் கொண்டதில் மாலைகளாகக் குவிந்து கண்ணீராக நனைந்ததில் – மரணம் என்னை நீ – நாளைக்கென்று குறித்துக் கொண்டிருக்கலாம், யார் கண்டது; இன்றைக்கே கூட…இருக்கலாம்!! ———————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆக, அவனோட மரணம்; அவனாலேயே அவனுக்கு நிகழ்கிறது!!

ஆற்றுமணல் வீடு கட்ட மட்டுமாச்சி, ஆறு ஏரி குளமெல்லாம் பாடத்தில் படிக்க மட்டுமாகுது, சோறு குழம்பு பதார்த்தம் கூட பேசனாயி போச்சி, பேசினாலும் நடந்தாலும் ஸ்டெயிலென்கிறான் மனிதன், செத்தாலும் மாலை போட்டு வீடு கட்டி அழுவுறான்; குடிச்சிப்புட்டு ஆடுறான்; சோறு கொஞ்சம் குறைந்தாலும் பொண்டாட்டிய அடிக்கிறான் போதை தெளிந்து விடியும் போது பேன்ட் சட்டையில் திரியுறான் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

அரைகுடத்தின் நீரலைகள் – 25

ஒரு மனிதன் பிறக்கையில் பிறக்கிறது மரணமும் மனிதனோடு வளர்கிறது மரணமும் மரணத்தை கொன்று கொன்று வென்று விட்டதாய் எண்ணும் நாளில் மரணம் மனிதனை நெருங்குவதை மனிதன் அறிவதுமில்லை, மனிதன் அடங்குவதுமில்லை! ————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்