Category Archives: ஞானமடா நீயெனக்கு

ஒரு குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே எண்ண தவிப்பு இருந்து விடும் அன்பை தவிர? அந்த அன்பினை எழுத்தால் சுருக்கி, அதற்கு ஞானமடா நீயெனக்கென புத்தகம் சார் முகமாக பெயரிட்டுள்ளேன்.. படித்துவிட்டு பேசுங்கள். மிச்ச்ள்ளமுதை மீண்டும் மறு பதிப்பாக்குவோம்!!

ஞானமடா நீயெனக்கு – 19

பை நிறைய சுமந்த உன் – புத்தகமாகத் தான் முழுதும் படிக்கமுடியாமலே கனக்கிறாய் எனக்குள்ளும் நீ!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 18

வேலைக்கிடையிலும் உனை நினைக்கும் பொழுதிலும் நீ என்னோடில்லாத – இடைவெளிக்குள்ளும் கேட்டுக் கொண்டு தானிருக்கிறது; நீ – அப்பா அப்பா என்றழைக்கும் அந்த இனிய குரல்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 17

உனக்காக நான் தேடித் தேடி வாங்கிய விளையாட்டுப் பொருட்களை உனக்கு அதிகம் பிடிப்பதில்லை, உனக்குப் பிடித்ததெல்லாம் உடைந்த காரும் வீட்டு உபயோகப் பொருட்களும் கைகால் இல்லாத பொம்மைகளும் தான். சரி வேறென்ன செய்வதென உடைந்த பொம்மைகளையெல்லாம் பாதிவிலைக்கு வாங்கிவந்தேன், நீ தூக்கி என்மீதெறிந்து விட்டு புதியது வாங்கித் தா என்றாய், நான் புதிய பொம்மைகளை தேடி … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 16

குச்சி மிட்டாய் காட்டுகலக்கா கைவிரல் அப்பளமென்றால் உனக்கு கொள்ளை இஷ்டம், கடைக்கு போகும்போதெல்லாம் கேட்பாய், வாங்கிக் கொண்ட கணம் துள்ளி ஒரு குதிகுதிப்பாய் குதூகலத்தில் கைதட்டி சிரிப்பாய் அந்த சிரிப்பை காண்பதற்காகவே சிலநேரம் – அவசியமின்றி கடைக்குப் போவேன் நான்!

Posted in ஞானமடா நீயெனக்கு | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 15

மழை வருகிறது நீ ஓடிச் சென்று மழையில் நனைகிறாய், நான் – ஐயோ மழையில் நனைந்து விட்டாயேயென பிடித்து உன்னை வீட்டிற்குள் அழைத்து வருகிறேன் தலை துவட்டிவிடுகிறேன் உன் ஈர விழியிலிருந்து சுடும் நீர் சொட்டொன்று – எனை எரிப்பது போல் தரைதொடுகிறது!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக