Category Archives: ஞானமடா நீயெனக்கு

ஒரு குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையே எண்ண தவிப்பு இருந்து விடும் அன்பை தவிர? அந்த அன்பினை எழுத்தால் சுருக்கி, அதற்கு ஞானமடா நீயெனக்கென புத்தகம் சார் முகமாக பெயரிட்டுள்ளேன்.. படித்துவிட்டு பேசுங்கள். மிச்ச்ள்ளமுதை மீண்டும் மறு பதிப்பாக்குவோம்!!

ஞானமடா நீயெனக்கு (53)

அலுவல் விட்டு இதர வேலைகள் விட்டு எல்லாம் விட்டு உனக்காக உன்னோடிருக்கும் கொஞ்ச நேரமே; எனக்கான நேரமென்று எனக்கொரு பூரிப்பு! ———————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு (52)

உனக்கு பிடித்ததை மட்டுமே நான் வாங்க முயல்வேன்; உனக்குப் பிடிக்காதது என்று ஒதுக்கிய சிலதில் என் பெயரும் ஏனோ முன்னுக்கு வருகிறது, ஆம்; நிறைய வீடுகளில் நிறைய அப்பாக்களை நிறைய பிள்ளைகளுக்கு பிடிப்பதில்லை போல்; அடிக்காத அப்பாக்களை தவிர! —————————————————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (50)

என்னவோ வளர்கிறாயடா நீ ஏன் நான் கண்டிக்கிறேன் என்று கூட புரிய மறுக்கிறாய்; உன் நிராகரிப்பில் நான் எத்தனை உடைகிறேன் என்பதை நீ புரிந்துகொள்ளும் காலம் வரை காத்திருப்பது – ஏதோ என் தவறிற்கான இறைவனின் தண்டனை என்று நினைத்துக் கொள்கிறேன்!! ——————————

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (49)

குழந்தைகளில் மிக சிறந்தவன் நீ என்று நினைப்பேன்; உண்மை தான் மிகச் சிறந்தவன் நீ, அதனால் தான் என்னை உனக்கு பிடிப்பதில்லை போல்! ———————-

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு (48)

உனக்கு காய்ச்சலென்று முடியாமல் மடி மீது படுத்திருக்கிறாய், உன் வலி தாளாத முகம் பார்க்க பார்க்க என் ஏழேழு பிறப்பினையும் சபிக்கிறது மனசு! —————————–

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்