Category Archives: தமிழீழக் கவிதைகள்

என் தேசம் எனது மக்கள் சார்ந்த வலிகளும் வருத்தங்களும் கோபமும்..

44 துர்க்கா என்றொரு தாயுமானவள்!

உறவோடு உயிர்வளர்க்கும் பெண்மையை உதறிவிட்டு – எம் உறவிற்காய் உயிர்தந்த தாயுமானவளே, அடுப்பெரிக்கும் பெண்ணிற்கு படிப்பெதற்கு என்றோருக்கு முன் – அடித்து போர் புரிந்து ஈழ விடுதலை நெருப்பிற்கு தன்னையே தரித்தவளே; பெண்படைக்கு ஆண்படை அஞ்சுமளவு எம்படை – எவரையும் வெல்ல ஒரு தனிப்படையையே தேற்றியவளே; காலம் காலமாய் யாரேனும் வந்து எமக்கென்று ஒரு தேசம் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

(43) மனிதத்தை மண் தின்ற நாள்; மே-18

வாருங்கள் தோழர்களே.. உறவுகளின் உயிர்மூட்டை சுமந்து முல்லிவைக்காலில் உயிர் நடவு செய்வோம்; பச்சிளம் குழந்தைகள் துடித்த நினைவெடுத்து – சிங்களனுக்கு ‘வெண்மனப் பட்டம் தருவோம்; நான்கு புறம் பரிதவித்த – என் மக்களின் கதறல்களையெல்லாம் சேகரித்து உலக மனிதர்களின் காதுகளில் ஓதுவோம்; பால்குடி மறக்காத பச்சிளம் குழந்தைகளையும் அப்பாவி மக்களையும் – அநீதியில் கொன்ற கோழைகளுக்கு … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , | 6 பின்னூட்டங்கள்

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (42)

ஒரு லட்சமாம் இரண்டு லட்சமாம் கணக்கு சொல்கிறது செய்தி முல்லைவாய்க்காலில் இறந்தவர் பற்றி; கணக்கில் வராது இறந்து போன எத்தனயோ உயிர்களுக்கென்ன இன்னொரு பிறப்பையா திருப்பித் தந்துவிடுமிந்த தேசங்கள்???? ஓஹோ; தமிழரை உயிர்கணக்கிலிருந்து தள்ளிவைத்துவிட்டார்கள் போல் சிங்களன் வெல்லும் வரை; பாவிகள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (41)

முட்கள் உடைந்து போன மீனுக்கு வருந்தும் இனம்.. என் – வீர சமருக்கு துணை நிற்காது வருந்தியென்ன பயனென்று சபிக்குமோ நமை – விளக்கேற்றுகையில் – நம் மாவீரர்களின் ஆத்மாக்கள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (40)

ஒவ்வொரு உறக்கத்தின் போதும் இமை விட்டு நீங்காத – பிணக்குவியல்களாய் முள்ளிவைக்காலில் முடைந்துப் போன எம் உறவுகளின் அந்த பிரிவு – அந்த நாள் – அந்த கதறல்கள் – அந்த பொழுது – எனக்கு கடைசி நினைவாக இருந்துவிட்டாலென்ன!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக