Category Archives: தமிழீழக் கவிதைகள்

என் தேசம் எனது மக்கள் சார்ந்த வலிகளும் வருத்தங்களும் கோபமும்..

நில்; கவனி; யாரிந்த முத்துக் குமார்?

குருதி வெறி கும்பல்களுக்கு உடல் சுட்டு இன அடையாளம் காண்பித்தவன்! இரத்தம் சுடும் உறவிருந்தும் ஒதுங்கி நின்ற தமிழகத்தில் – யுத்தம் புகும் உணர்வூட்டியவன்! தொப்புள் கொடி உறவறுத்து ஈழத் தமிழ் இனத்திற்காய் – தீ புகுந்து தமிழர் உள்ளம் தொட்டவன்! யார் குற்றமும் பகிராமல் என் போன்ற இளைஞன் குற்றமென நெற்றி பொட்டில் நெருப்பெய்தி … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்

பொங்கலோ பொங்கல்; பொங்கலோ பொங்கல்!

தமிழன் வாழ்ந்த வரலாறு தரணிக்கெல்லாம் தகராறு; பொங்கலோ பொங்கல்! ஆறு போகம் வெளஞ்ச மண்ணில் வீரமெங்கே போச்சிதோங்க பொங்கலோ பொங்கல்! நாட்டுநடப்பு நாறுது; எல்லாம் விலையும் ஏறுது வயித்து பொழப்பு நடக்கலையே பொங்கலோ பொங்கல்! தமிழன் தானே ஆளுறான் தமிழன் தானே சாகுறான் கேட்க நாதி ஒண்ணுமில்லே பொங்கலோ பொங்கல்! பழைய கந்த கொளுத்தல பானை … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

தந்தை திருவேங்கடம் வேலுப் பிள்ளைக்கு சமர்ப்பணம்

ஒரு வரலாற்றின் இரத்தம் பாய்ச்சி – உயிர் தந்த கோடியே; முடங்கிப் போன இனத்திற்கு முழக்கம் கொடுத்த – உயிர்மூச்சே; உலகின் எல்லை கோடு வரை ஈழம் – தலைநிமிர தலைமகனை தந்த வரமே; தேசியம் கற்பிக்க எங்கள் தேசியத் தலைவனை பெற்றெடுத்த பேரே; உன் மூடிய கண்களிலிருந்து எந்த சுதந்திரம் – எங்களுக்காய் பிறக்குமோ … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 4”

கழுகு கழுகாரே.. கழுகாரே.. முக்கால் மைல் தூரம் மேலே பறந்தாலும் கீழேயுள்ள உயிர்கள் கூட உனக்கு நன்றாகத் தெரியுமாமே; நீ – மகாவிஷ்னுவிற்கே வாகனமாமே; கொஞ்சம் மேலே பறந்து வட்டமடித்து வா – எங்கள் தமிழீழ மண்ணில் புதைக்கக் கூட இல்லாமல் காடுகளில் ஆங்காங்கே – அழுகிக் கிடக்கும் ஒவ்வொரு உடலுக்குள்ளும் ஒவ்வொரு வரலாறிருக்கும் சொல்வாயா … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள்”

எல்லோருக்கும் பறவை கவிதை பிடிக்குமென்று நினைக்கிறேன். அது ஒரு வலியின் சுவடு.. தவிர இக் கவிதைகளுக்கு காரணம் சொல்லவேண்டாம் அது ஒரு வலி வேதனை ரணம், உடல்கட்டை எரிந்தாலும் ஆறாத காயம். நேரில் காணாவிட்டாலும் காதுக்கருகில் வெடிக்காத சிங்கள குண்டுகளின் சப்தம் என் மனதை தொலைத்த வலிகளும், நாளிதழ்களிலும், மின்னஞ்சல்களில், செய்திகளிலும் ரத்தம் ரத்தமாக கண்ட … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக