Category Archives: பறக்க ஒரு சிறகை கொடு..

ஒரு காதல்; காதலின் நினைவு; முதல் காதலின் வலி; முழு வாழ்க்கைக்குமாய் பயணிக்கும் காதலின் வெற்றியும் தோல்வியுமாய் நாம் என்னும் உணர்வுகளே ‘கவிதை இலக்கணம் கடந்து, இங்கே கவிதைகளென்று தன்னை அடையாள படுத்திக் கொள்ளத் துணிகிறது!

6 இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!

அந்த மின்னலின் வேகத்தில் இதய சொந்தமானவளே, சொக்கும் விழிப் பார்வையின்றி மனதால் சொக்குப் பொடி போட்டவளே;   மிச்சமுள்ள ஆசைகளில் மொத்தமாய் பூத்தவளே, மூன்று கடல் தாண்டி நின்றும் காதலால்; இதயத்தில் அறைந்தவளே;    காலதவம் பூண்டெழுந்து பரிசிட்ட பெண்விளக்கே, கவிதை நெருப்பென பொங்கி  இதயத்தை உணர்வுகளால் சுட்டவளே;   மூச்சிக்கு முன்னொரு முறையேனும்  சுவாசத்தில் … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , | 13 பின்னூட்டங்கள்

பறக்க ஒரு சிறகை கொடு.. 5

தொட எண்ணினால் இனிக்குமோ பார்த்தால் கவருமோ  பார்த்த பின் மயக்கமோ மயங்கினால் சிரிக்குமோ சிரித்தால் சொர்கமோ சொர்க்கம் தரையிலோ நடக்கும் பெண்ணிலோ பெண்ணென்றால் பூவோ சுடும் தென்றலோ சொல்லியடங்கா எல்லையின் விரிவோ விரிந்த வான் மனமோ ஆழக் கடல் எண்ணமோ   என்னெல்லாம் எழுதினேன் – அவள் எழுதிய என் காகிதத்தை படித்து மடித்துக் கொண்ட பின் … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பறக்க ஒரு சிறகை கொடு.. 4

உனை நான் தூர நின்று பார்ப்பேன் கற்பனையில் நெருங்குவேன் கண்ணியத்தில் தொடுவேன் காற்றுக்கும் தெரியாமல் மனதால் ரசிப்பேன் உனை பார்க்கும் போது கூட உன்னிடம் – பார்ப்பதை காட்ட அச்சப் படுவேன்;   பேசினால் வார்த்தையினூடே தெறிக்கும் காதலையும் விழுங்கி விழுங்கி பேசுவேன்;   அதலாம் மீறி எப்படியோ உனக்குத் தெரிந்து விட்டது நானுன்னை நேசிப்பது. … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பறக்க ஒரு சிறகை கொடு.. 3

உனக்கும் எனக்கும் ஜாதியென்றும் மதமென்றும் இனமென்றும் பணமென்றும் இல்லையென்று ஏழையென்றும் எத்தனை பேதங்கள் வேண்டுமாயினும்  இருந்து போகட்டும்;  பிடிக்கவில்லையென்ற  ஒன்றை தவிர!  ———————————————————————-

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பறக்க ஒரு சிறகை கொடு.. 2

நீ பார்க்கும் கண்ணாடியில் என் நினைவு படர்ந்ததுண்டா?   நீ விளக்கும் பற்பசையில் என் நினைவு – இனித்ததுண்டா??   நீ எழுதும் எழுத்துக்களில் என் பெயர் தெரிவதுண்டா?   நீ பார்க்கும் பார்வையில் எனக்கான தேடலை வைத்திருக்கிறாயா???   தேடித் பார்.. எங்கேனும் உனக்குள் நான்  நிச்சையம் இருப்பேன் –   இல்லையெனில் எனை பார்க்காதே  யாருக்கும் … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக