Category Archives: பறக்க ஒரு சிறகை கொடு..

ஒரு காதல்; காதலின் நினைவு; முதல் காதலின் வலி; முழு வாழ்க்கைக்குமாய் பயணிக்கும் காதலின் வெற்றியும் தோல்வியுமாய் நாம் என்னும் உணர்வுகளே ‘கவிதை இலக்கணம் கடந்து, இங்கே கவிதைகளென்று தன்னை அடையாள படுத்திக் கொள்ளத் துணிகிறது!

41) என் எல்லாமாய் ஆனவளே…

மினுக்கும் தங்கத்தில் சிணுங்கி பிறந்தவளோ, ஒரு சிங்கார சிரிப்பிற்குள் எனை உயிரோடு கொள்பவளோ; கடக்கும் பொழுதெல்லாம் எனை காதலால் குடிப்பவளோ, ஒரு கையளவு மனசாலே – எனை காலத்திற்கும் சுமப்பவளோ; தொடும் காற்றோ; தொடாது சிலிர்க்கும் பூவிதழோ, உள்புகும் ஆசை நெருப்போ – உயிர்வரை பதிபவளோ; உணர்வுகடலில் உயிர்த்தெழுந்த ஒற்றை பாடலின் ரெட்டை அர்த்தமோ; எதுவாகியும் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

40, கண்ணைப் பறிக்கிறாள் அவள்; இதயம் துடிக்கிறதே!!

உச்சிவெயில் எனை எரிக்கும் சூட்டை உன் ஒற்றை பார்வை தனித்ததடி நாளையும் வந்து இங்கே நிற்பேன் – நீ வந்தால் வாழ்க்கை சொர்கமடி! சற்று களைந்து சிலிர்ப்பும் உன் அடர்கூந்தல் காற்றில் பறக்கும் என் இதயமடி – காடு போல் பரந்துகிடக்கும் என் இதயதெருவில் நீ மட்டுமே வீற்றிருக்கும் தேவியடி! நெற்றி சுருக்கி நீ பார்த்தாய் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

39 மின்சாரக் காதலியே..

சில்லறையாய் சிரிப்பவளே செல்போனாய் அழைப்பவளே ரிங் டோனாய் சினுங்கி சிணுங்கி இன்பாக்ஸ் மெசேஜாக குவிந்தவளே! டிவி போல இருப்பவளே சீரியல் போல வளர்ந்தவளே விளம்பரமாய் வந்து வந்து பல சிறப்பு-நிகழ்ச்சியாக ஜொளிப்பவளே! எஃப் எம்மை போன்றவளே எது கேட்டாலும் தருபவளே பாட்டை விட இனிக்க இனிக்க நினைவு பேட்டரியால் உயிர்ப்பவளே! லப்பு – டப்பாய் அடிப்பவளே … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

38 காதலிப்பதாய் சொன்னதில்; கண்ணிரண்டும் மூடிக் கொண்டதே!!!!

முதன் முதலாய் ஒரு வெளிச்சம் கண்டேன் இதுவரை கண்டிராத சந்தோசத்தின் வெளிச்சம் கண்டேன் முதன் முதலாய் அவள் பூக்கக் கண்டேன் எனக்காய் எனக்காகவே இன்று பூக்கக் கண்டேன் முதன் முதலாய் அவள் சிரிப்பை கண்டேன் எனை பார்த்து சிரித்த தனிச் சிரிப்பை கண்டேன் முதன் முதலாய் அவள் வெட்கம் கண்டேன் தரையில் கால்கள் கோலமிடாது விழிகள் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

37 காதலிப்பதாய் சொன்னதில்; கண்ணிரண்டும் மூடிக் கொண்டதே!!!!

அவளெனக்கு எழுதிய எந்த கடிதத்திலுமே என்னை காதலிப்பதாக சொல்லவில்லை நானும் நிறைய கடிதமெழுதியதுண்டு வரிக்கு வரி காதலாகவே கரைந்ததுண்டு கடைசி வரை அவள் காதலிப்பதாக சொல்லவேயில்லை நானும் வற்புறுத்தியதில்லை இன்று எத்தனையோ வருடங்களுக்குப் பிறகும் அந்த அவளெழுதிய கடிதங்களை எடுத்துப் பார்த்துக் கொள்வதுண்டு ஒருவேளை அவளும் என்னை காதலித்திருக்கக் கூடும்!! ———————————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக