Category Archives: பறக்க ஒரு சிறகை கொடு..

ஒரு காதல்; காதலின் நினைவு; முதல் காதலின் வலி; முழு வாழ்க்கைக்குமாய் பயணிக்கும் காதலின் வெற்றியும் தோல்வியுமாய் நாம் என்னும் உணர்வுகளே ‘கவிதை இலக்கணம் கடந்து, இங்கே கவிதைகளென்று தன்னை அடையாள படுத்திக் கொள்ளத் துணிகிறது!

16 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

ஓடும் பேருந்தில் முன்னே நீ நிற்கிறாய் பின்னே நான் உனையே பார்த்துக் கொண்டு நிற்கிறேன் யாரோ என்னை பொருக்கி என்று சொல்வதும் உனக்குக் கேட்டிருக்கலாம் இருந்தும் நீ திரும்பிப் பார்க்காமலே தலைகுனிந்துக் கொண்டதில் தோற்றுத் தான் போனது நம் காதல்! —————————————————————

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

15 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

விடைபெற இயலா தருணங்களில்; நினைவுகளை நம்மோடு அழைத்துக் கொள்வோம்; நினைவுகளிலாவது நாம் காதலராய் – செர்ந்தேயிருப்போம்! ———————————————–

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

14 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

உன் வாசத்தில் ஒரு சொட்டு உன் தாவணிப் பூவிலிருந்து விழுகிறது – அள்ளிப் பருகும் காற்றிடம் கோபம் கொண்டு – உன் தாவணியை பிடித்தேன் நான் எனை முறைக்க வில்லை நீ சிரிக்கவில்லை பார்க்கிறாய் பார்க்கிறாய் அப்படி பார்க்கிறாய் உன் தாவணி எடுத்து இரு கை நிறைத்து உயிர்வரை நுகர்கிறேன் நான் உன் வாசம் என்னுள்ளே … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

13 குறுந்தகவலில் காதல் சொன்னாய்..

உன் கைகடிகாரப் பட்டையின் உள்ளே சொருகி வைத்திருந்த புகைவண்டியின் அனுமதி சீட்டு கீழே விழுந்து விடுகிறது. நீ எடுக்காமலே புகைவண்டியிலிருந்து இறங்கிப் போகிறாய். நான் தவற விட்டு விட்டாயோ எப்படியேனும் – எடுத்துக் கொடுப்பது போல் உன்னை அருகில் வந்து பார்த்து விடலாமென எடுத்துக் கொண்டு ஓடி வருகிறேன். நான் அருகில் வந்ததும் நீ சிரித்துவிட்டு … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

12 வார்த்தைகளில் மெல்ல மெல்ல..

என் இனியவளே வார்த்தைகளில் மெல்ல மெல்ல இதயம் தொட்டவளே, உள்ளிருக்கும் காதலுணர்வை பார்வையால் ஈர்தவளே, காலத்தின் வழி தடத்தில் – எனக்குமாய் உதித்தவளே, உன் வாழ்நாளில் ரசனைகளில் என்னையும் சேர்த்தவளே.. வா.. உன்னில் பதிந்த ஒரு நினைவெடுத்து கவிதைகளாய் பூப்பிப்போம்; உன் மௌனத்தின் புன்னகை உடைத்து – காதலாய் காதலாய் மலர்விப்போம் வா..!

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக