Category Archives: பிரிவுக்குப் பின்!

மூன்று முடுச்சில் இறுகிய இதயங்களின் துடிப்பு..

பிரிவுக்குப் பின் – 64

என் உயிரில் முள் குத்தியதாய் உணர்ந்த பொழுதே நினைத்தேன்; நீதான் அங்கு அழுகிறாய் என்று, எட்டித் – துடைப்பதற்குத் தான் – இந்தியாவும் குவைத்தும் அருகருகில் இல்லையே!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 62

கவிதைக்கு பரு பொருள் ஞானமல்ல; வலி என்பதை – நீயில்லாத கால இடைவெளியில் – கனத்து நிற்குமென் கவிதைகள் சொல்கின்றன!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 61

உனக்குப் பிடித்தமான உணவுகளை – நீயில்லாத பொழுதில் தின்கையில் கண்ணீரின் உப்பு அதிகமாக தான் கரிக்கிறது!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 60

கனவில் நீ – வருகிறாய், கனவிலிருந்து தொடரும் உன்னையுமென்னையும் பிரித்த சோகம்- கனவுக்கு பின்னும் நீள்கிறது; காலத்தின் கைகளில் நீயும் நானும் எப்பொழுதும் – பிரிந்தே பிரிந்தே கணவனும் மனைவியுமாக!!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 59

நானிங்கு சம்பாதிக்கும் பணம் – இரக்கமின்றி தின்கிறது நம் – சந்தோசங்களையும் சிரிப்பையும்; இருந்தும் – உலகிற்கு நாம் நலமென்றே தெரிகிறது!!

Posted in பிரிவுக்குப் பின்! | 2 பின்னூட்டங்கள்