Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

134 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

நெடுஞ்சாலையின் ஓரத்தில் – எழுதிவைக்கப் பட்டுள்ள வாகனக் கட்டுப் பாட்டுத் துறையின் அறிவிப்பு எல்லோரின் வேகத்தையும் கட்டுப் படுத்தி விடவில்லை; நிறைய – விபத்துகளை மட்டும் கணக்கில் வைத்துக் கொள்கிறது!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

133 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

உள்ளூர் நெரிசல்களை தாண்டி நெடுஞ்சாலைகளில் அதிவேகமாய் பயணிக்கும் வாகனங்களுக்கிடையே அறியாமல் ஓடிவரும் சிறுவனை எந்த பிரேக்கும் சாமியும் – காப்பாற்றிவிடுவதில்லை; இரத்தம் மட்டும் – காண்பவரின் இதயத்தை நனைத்துவிட்டு வாகனங்களின் வேகத்தில் காய்ந்தேவிடுகிறது!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

132 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

தெருக்களில் – எத்தனையோ வாகனங்கள் தரையை கிழிக்கும் விதமாய் சீறிப் பறக்கிறது, யாருக்கு என்ன அவசரமோ?? எந்த வண்டி விமானத்தின் கடைசி நிமிட துளிகளின் அவசரத்திற்காய் போகிறதோ, எந்த வண்டியில் ஒரு சகோதரி பிரசவ வலியால் துடிக்கிறாரோ?? எந்த வண்டி இண்டர்வியூ முடியும் கடைசி தருவாய் நோக்கி விரைகிறதோ, எந்த வண்டியில் மரணம் நெருங்கும் யாரோவை … Continue reading

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

36 முள்ளிவாய்க்காலுக்கு அப்பால்!!

ஈழ விடிவு நோக்கி இடையுறாத காத்திருப்பிற்க்கிடையே விதி ஏற்று – குடும்பம் சுமந்த சுயநல பிறப்பாய் வந்தேறிய தமிழக தெருக்களில் தள்ளாடுகிறது என் கால்கள்; ஒரு – மழை படராத சுவற்றில் வர்ணப் பூச்சுகள் உதிர்ந்த சுவடுகளுக்கிடையே ஏனோ லயிக்கிறது மனசு; என் உடைபடாத வார்த்தைகளுக்கிடையே சிக்கித் தவிக்கும் கண்ணீர் குவியலில் யார் யாரை நான் … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

மறக்காத நினைவுகளில்; நாயும் ஒன்று (29)

என் வீட்டு எண்ணிக்கையில் எங்களை எல்லாம் மீறி – நன்றியோடு சேர்ந்திட்ட மற்றொரு உறவு; அக்கா அண்ணன் கோபித்த போதும் அம்மா திட்டிய போதும் அப்பா அடித்த தருணங்களின் போதும் வாலாட்டி, முகம் தடவி குழைந்து குழைந்து அன்பூட்டிய செல்ல விலங்கு; பகலெல்லாம் தூங்கியோ தூங்காமலோ எதையேனும் உண்டோ இல்லாமலோ கால் சுற்றி வந்த மிச்சத்தை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்