Category Archives: கவிதைகள்

என் சமூகம், என் வீடு, என் மக்கள் சொந்தமான, சார்பான உணர்வுகளுக்கு உலகின் பார்வையை கருதி நானும் இட்டுக் கொண்ட பெயர் கவிதை!

ஞானமடா நீயெனக்கு – 12

இப்பொழுதெல்லாம் நீ நன்றாகவே நடக்கிறாய், இருந்தும் – சந்தைக்கு செல்கையில் வீடு வருகையில் வெளியே செல்கையில் உனை தூக்கிக்கொண்டே நடக்கிறேன், நீ கனத்தாலும் உனை சுமப்பதில் எனக்கொரு ஆசை; சொர்கத்தை சுமப்பது இப்படித் தான் – சுகம் போல்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 11

எச்சில் – ஒழுக ஒழுக எனைக் குடிக்கிறாய், உடம்பெல்லாம் ஏறி மிதித்து கன்னம் கீறி மூக்கை கடித்து தலைமுடி பிடித்திழுத்து உதட்டை கிள்ளி அப்பப்பா… உனை என்ன செய்கிறேன் பாரென்று வந்த கோபத்தை – ஒரேயொரு முத்தத்தில் ஒத்திஎடுக்கிறாய். நான் கொஞ்சம் சிரிக்கையில் மீண்டும் – நீ கிள்ளி கீறி எனை ஏறி மிதிக்க நீள்கிறது … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | 4 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 10

எல்லாமே – களைந்து கிடக்கும் வீடு, மடித்து வைத்திடாத துணிகள், இங்குமங்குமாய் சிதறிய தின்பண்டம், வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு – தெரியுமாத் தெரியவில்லை இது – நீயிருக்கும் வீடென்று!

Posted in ஞானமடா நீயெனக்கு | 2 பின்னூட்டங்கள்

ஏனோ; இந்த வாழ்க்கை??? (24)

மூனு வேளை சோறு ஒரு வேளை ஆனது, பத்து மணிநேர தூக்கம் ஐந்து மணிநேரமானது, மாதத்திற்கு ஒரு முறை வெட்டும் – முடி கொட்டி – மொட்டைதலையானது, ஒரு நேர உடல்பயிற்ச்சிக்கும் அவகாசமின்றி – தொப்பை வேறு சட்டி போலானது, இனிப்பு தின்பதோ காரம் விரும்பித் தின்பதோ சிகடை, தேன்மிட்டாய், கைவிரல் அப்பளம், அச்சுமுறுக்கு, தட்டை, … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 9

நானும் நீயும் அடித்து அடித்து விளையாடுகிறோம், நீ எனக்கு வலிக்கும்வரை அடிக்கிறாய்.., நான் – எங்கு உனக்கு வலித்துவிடுமோ என அடிப்பது போல் பாவனை செய்கிறேன்!

Posted in ஞானமடா நீயெனக்கு | 3 பின்னூட்டங்கள்