Category Archives: கவிதைகள்

ஹைக்கூ – 105

என் எழுதுகோலை பிடுங்கிக் கொள்வதாய் எதிரே நின்று – நிறைய பறவைகள் கத்துகின்றன; என்னை பற்றியும் எழுது – என்கின்றனவா, என்னிடம் – பாடம் கேள் என்கின்றனவா புரியவில்லை!

Posted in உடைந்த கடவுள் | 10 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 104

நிறைய – உண்மை புரியாமல் தான் கால்சட்டையும் மேல்சட்டையும் மாட்டிக் கொள்கிறோம்; உண்மையை ஆடை – மறைத்துக் கொள்கிறது!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 103

இரும்புப் பாத்திரத்தில் தாளித்த குழம்பில் மன்சட்டியின் வாசனை கருகிக் காணாமல் – போய்விட்டது!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 102

கேஸ் ஸ்டவ்விலும் குக்கரிலும் வேகும் சோற்றுப் பருக்கைகள் மறந்துத் தான் போயின பானையில் வெந்ததை!

Posted in உடைந்த கடவுள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ – 101

பானை – நிறைய வீடுகளில் உடைவதேயில்லை காலத்திற்கும்!

Posted in உடைந்த கடவுள் | பின்னூட்டமொன்றை இடுக