Category Archives: விடுதலையின் சப்தம்

என் வலிக்களின் வடுக்கள்..

ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

பிள்ளுக் கட்டுப் போல சேர்த்து சுட்டு சாய்த்த – ஜனங்க நாங்க; சிங்கள அரசு திமிரை எதிர்த்து மாறு தட்டின – தமிழன் தாங்க! உயிரை கொடுத்து- உயிரை கொடுத்து- ஈழங் காத்த – மனுஷ(ன்) தாங்க; காலங்காலமா ஒரு இனம் செத்து மடிந்தும் – தட்டிக்கேட்காத இந்திய(ன்) நீங்க! முள்ளு வெளி கம்பியெல்லாம் எங்க … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்

மாவீரர் நாள்

ஒரு – உயிர்போன உடலிலிருந்து ஒவ்வொரு சொட்டாய் சொட்டி எரிகிறது – ஈழ விடுதலைக்காய் காத்திருந்த அறுபது வருடக் காத்திருப்பின் பொழுதுகளும்; கைபாதி கால் பாதியோடு உறவுகளை தொலைத்துவிட்டு உயிர் என்னும் – ஒற்றை சொல்லில் ஒட்டிக் கொண்டு எதிர்நோக்கும் எஞ்சியவர்களின் விடுதளைக்காவது – நான் பொறுப்பென சபதம் – செய்கிறதா தெரியவில்லை நெருப்பு; மிக … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

மாசிலா மன்னனே.. (தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன்)

உலகத்தில் பேர் சொல்ல தலைவருண்டு நீ மட்டுமே – தமிழர்களை தலைவனாக்க தலைவனானாய்; உலக நாடுகள் தன்னை நீட்டி விரித்துக் கொண்ட போது – நீ மட்டுமே – தமிழனுக்கும் தனி நாடுண்டென ஈழத்துக் கொடி பிடித்தாய்; புலி விரட்டிய தமிழச்சியின் தவப் புதல்வனே தொப்புள் கொடி உறவறுத்து – தமிழருக்கு அண்ணனான அண்ணலே; வாழ்வது … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 3 பின்னூட்டங்கள்

ஏ.. மனிதமே நீ மிச்சமிருந்தால்

ஈழ தேசத்தின் – கதறல்கள் காதை பிளக்கத் தான் கையில் சோற்று தட்டேந்தி – வாழுகிறோமோ; எங்கும் வீசும் பிணவாடை மறந்து தான் சேலை சுகவாடை – நுகர்கிறோமோ; பிள்ளை பல எரிந்து கருகிய சாம்பலில் தான் நீயும் நானும் பொழுது போக்கிற்காய் பேசி நடக்கிறோமோ; ஐயோ இறைவா.. ஈழப் பிணக் காடு கண்டால் – … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

ஈழம்

கத்தி எடுத்ததும் குண்டு வெடித்ததும் வரலாறு; குழந்தை கொன்றதும் குடி அறுந்ததும் வரலாறு; ரத்த ஆறு கடந்து மனித சடலம் குவித்து எரித்தது வரலாறு; பெண்களை கெடுத்து கொன்றதும் கொன்று கெடுத்ததும் வரலாறு; எல்லாம் வரலாறு வரலாறே மிஞ்சிக் கிடக்க – ஒரு விடியல் கிடைக்காமலே ஈழம்! ——————————————- வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக