அன்புடையீர் வணக்கம்,
ஒரு கால தவம்; நிகழ்வின் வெற்றிகளில் பூரிக்கிறது. அப்படி வெற்றி கொப்பளிக்கும் ஒரு தினத்தை நோக்கி விழா எடுக்கிறது ‘குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர்கள் சங்கம், ஐயா திரு. செம்பொன் மாரி. கா சேதுவின் தலைமையில்.
கவிஞர் திரு. யுகபாரதியின் தலைமையில் ‘கற்பனை மட்டுமல்ல கவிதை’ எனும் கவியரங்கமும், கிராமிய பாடகி திருமதி. சின்னப் பொண்ணுவின் தலைமையில் வ.வா.க.ச மற்றும் சங்கமம் குழுவினரின் ஆடல் பாடல்களும், மேகமாய் திரைப்பட இசையமைப்பாளர் திரு.ஆதி அவர்களின் தலைமையில் நிகழ்த்துக் கலையும் என, நம்மை தமிழர் சார்ந்த கொண்டாட்டங்களாக குதூகலப் படுத்தவிருக்கும் ‘இப்பெரு விழா சிறப்புடன் நடைபெற, தோழமை கொண்டு அனைவரும் பங்கேற்று, நிகழ்ச்சியினை சிறப்பித்துத் தருமாறு வேண்டி, எங்களின் மனம் நிறைந்த வரவேற்பிணை நவில்வதில் பெருமை கொள்கிறோம்.
நாள் : 19.11.2010, வெள்ளிக் கிழமை, துவக்கம் – 5.30 மாலை
இடம் : அமேரிக்கா சர்வதேச பாடசாலை, சால்மியா, குவைத்
தொடர்புகளுக்கு – 00965 – 67077302
நன்றிகளுடன்..
வித்யாசாகர்
























