22 மாவீரர்கள் தின சிறப்புப் பாடல்.. (முதல் ஒலிபரப்பு)

அன்புள்ளங்களுக்கு வணக்கம்,

ஒரு நாள் முழுக்க எடுத்த முயற்சி. சென்னையில் மியூசிக் தியேட்டரில் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு GTV நிகழ்ச்சிக்காக பாடி இசையமைத்த பாடல். பயன்படுத்துபவர்கள் படைப்பாளிகளின் பெயரோடு வெளியிடலாம்.

சையமைத்து பாடியது :
பிரபல இசைமைப்பாளர் ‘திரையிசை தென்றல் ஆதி
பாடல் வரிகள்: வித்யாசாகர்

பல்லவி

ன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்..
தேசம் காக்க உறவுகளே ஒன்றுகூடுங்கள்;
ஆண்டை சொன்ன பாதையிலே உணர்வு கொள்ளுங்கள்
இனி ஒற்றை உயிரை இழக்காமல் ஈழம் வெல்லுங்கள்!!

சரணம் – 1

ரு தலைமுறைய தொலைத்துவிட்டு
நாட்டை தேடுறோம் –
நாடோடி போல ஓடி ஒண்டி கிடக்கிறோம்,

தமிழன்; ஆண்ட கதை மண்ணில் போச்சி
வென்ற ரத்தம் சுண்டி போச்சி –
பிரிந்து பிரிந்து இருப்பதால் வாழ்க்கை கூட தோல்வியாச்சி……..

ன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்..
தேசம் காக்க உறவுகளே ஒன்றுகூடுங்கள்;
ஆண்டை சொன்ன பாதையிலே உணர்வு கொள்ளுங்கள்
இனி ஒற்றை உயிரை இழக்காமல் ஈழம் வெல்லுங்கள்!!

சரணம் – 2

வாழ்க்கைக்கொரு நீதி வேணும்
போருக்கொரு நீதி வேணும்
நீதியின்றி கொன்றவனை ‘நீதி நின்று கொள்ளுமே,
எம் தமிழர் சாதி என்றைக்குமாய் காலம் வெல்லுமே;

ஆண்டாண்டா அழுத மண்ணில் அமைதி கொடிகள் பறக்கட்டும்
எங்கள் குழந்தையெல்லாம் சிரித்து சிரித்து பூத்து குலுங்கட்டும்
வீரமறவர் துயிலம் சென்று – தீபமேற்றட்டும்!!

ன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்..
தேசம் காக்க உறவுகளே ஒன்றுகூடுங்கள்;
ஆண்டை சொன்ன பாதையிலே உணர்வு கொள்ளுங்கள்
இனி ஒற்றை உயிரை இழக்காமல் ஈழம் வெல்லுங்கள்!!

சரணம் – 3

னவுகளை சேகரிப்போம்
காடுபோல கூடி நிற்போம்
விடுதலையை வென்றெடுப்போம்
பட்ட அடியில் பாடம் கற்று – அடிமை வாழ்வை தகர்த்தெறிவோம்;

சமத்துவத்தை சொல்லி –
தமிழர் பண்பில் மிஞ்சி
எதிரி கூட எஞ்சி வாழ சீர் திருத்தம் போதிப்போம்
தோல்வி விரட்டி; வீரம் செறிந்து; வெற்றி வெற்றியென்று பாடுவோம்!!

ன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்..
தேசம் காக்க உறவுகளே ஒன்றுகூடுங்கள்;
ஆண்டை சொன்ன பாதையிலே உணர்வு கொள்ளுங்கள்
இனி ஒற்றை உயிரை இழக்காமல் ஈழம் வெல்லுங்கள்!!
—————————————————————————————
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., பாடல்கள், GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 20 பின்னூட்டங்கள்

21 மாவீரர்களுக்கு என் வீர வணக்கம்..

னவுகளை சேகரிப்போம்
காடுபோல கூடி நிற்போம்
விடுதலையை வென்றெடுப்போம்
பட்ட அடியில் பாடம் கற்று – அடிமை வாழ்வை தகர்த்தெறிவோம்;

சமத்துவத்தை சொல்லி –
தமிழர் பண்பில் மிஞ்சி
எதிரி கூட எஞ்சி வாழ சீர் திருத்தம் போதிப்போம்
தோல்வி விரட்டி; வீரம் செறிந்து; வெற்றி வெற்றியென்று பாடுவோம்!!
———————————————————————-
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

20 அன்பு அண்ணன் பிரபாகரனுக்கு வாழ்த்து!!

வனோ கிள்ளியெறியத் துணிந்த எம் வீரத்தை
விடுதலையை –
எம் உணர்வை –
மீண்டும் மீண்டுமாய் உயிர்பித்துத் தந்தவரே;

வாழ்வின் வெற்றிதனை –
விடுதலை வேட்கையாகக் கொண்டு –
மொழி உணர்வை தமிழ் உணர்வென – என்
கடைசி தமிழனுக்கும் ஈந்தவரே;

வீழும் ஒரு தோல்வியில் கூட –
பாடம் உண்டென மீண்டு –
எமை மெல்ல மெல்ல ஒருங்கிணைத்து
ஒரு தேசமாய் வளர்த்தவரே;

அடங்கிப் போனவள் கையில் ஆயுதம் பிடிக்கவும்
அடிமை என்றெண்ணியவனுக்குத் திருப்பியடிக்கவும்
உயிர் பறித்துப் போனவனிடம் இருந்து – எம்
விடுதலையை மீட்கவும் பாடம் புகட்டியவரே;

ஒழுக்கத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் போதித்து
வீரத்தை எம் குழந்தைகளுக்கும் ஊட்டி –
தேசம் என்றால் எது என்றும், அதை தமிழன் ஆண்டால்
எப்படி இருக்குமென்றும் உலகிற்குக் காட்ட உழைத்தவரே;

என் தாய் வயிற்றில் பிறக்காமல் உற்ற
என்னன்பு அண்ணனே,
என்றேனும் ஓர் தினம் எம் தேசம் ஆளப் போகும்
எம் புகழ்மிகு மன்னனே,

உனக்கு செல்வங்கள் பதினாறென்ன –
இருக்கும் எல்லாம் வளமும் நலமும் கிடைத்து
சுதந்திரம் வீசும் மண்ணின் – ஒற்றை தலைவனாய்
எமை காக்கும் உண்மை தலைவனாய்

வாழ்வாங்கு வாழ –
எம் இனத்தின் மொழியின் வழிநின்று
இறையின் அருளுக்கு இறைஞ்சி
மனதார வாழ்த்துகிறோம்!!
——————————————————
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள், வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

19 ஈழக் கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம்…!!

போராடி; தொலைத்தது போல் வருடங்கள்
மௌனமாய் தொலைகிறதே.,
தேசம் கடந்து போன என் மக்கள் –
ஊர்திரும்பா வேதனையில் ஈழக் கனவும் குறைகிறதே;

மாவீரர் தினம் கூட –
ஒரு பண்டிகையாய் வருகிறதே
மலர்வளையம் வைத்து வணங்கி –
மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே;

வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் – சொட்டிய ரத்தம்
எப்படி உள்ளே நினைவறுந்துப் போனதுவோ???????
விழுந்து துடித்த பிள்ளைகளின் அழுகுரல்
எப்படி ஓரிரு வருடத்தில் அந்நியம் ஆனதுவோ????

வலிக்கும் வலியின் ரணம்; சுதந்திரமெனில்
துடிக்க மறந்ததேன் உறவுகளே ? இன்னும்
மறந்து வானம் பார்த்து நிம்மதி பெருமூச்சு விடுமளவு
நாம் சொந்த மண்ணில் வாழவில்லையே உறவுகளே..

சிரிக்கும் சிரிப்பில் முழு சுதந்திரம் இருக்குமெனில்
போகட்டும் ஈழம் மறப்போம். மறப்போம்.
சிறை பட்ட வாழ்வில் சிரிக்கப் பணித்த நமக்கு –
விடுதலை எட்டா நிலை எனில்; மறக்கலாமா சுதந்திரம்???????????

மண்ணில் ஆண்டாண்டு காலமாக
அடிமை சங்கிலி உடைக்க இழைத்த கொடுமைகளும்
இழப்பும் ஒன்றோ இரண்டோ இல்லையே,
பின் – ஒடுங்கிக் கிடப்பின் –
சுதந்திரம் செல்லாக் காசாகுமே உறவுகளே..???

நினைக்கிறோம்; போதவில்லை, துடிக்கிறோம; போதவில்லை,
அழுகிறோம்; போதவில்லை, பதைபதைக்கிறோம்;போதவில்லை……
இப்போது எல்லோருக்கும் இல்லாத இவ்வுணர்வு –
விடுதலை வெல்லுமளவிற்கு போதவில்லையே!

உணர்வு, உணர்வு, உணர்வு……………….
உணர்வு மெல்ல ஒவ்வொருவருக்காய் அறுபட்டு
இப்போது உயிர் இருந்தும் கடைசியில் –
இறக்க இயலா நடைபினமானோமே!!!!!!!!!!?

கடைசியாய் ஒன்று சொல்கிறேன் உறவுகளே –
ஈழம்……………………………………………………………………..
ஈழம் என்பது, இனி, மெல்ல மறந்துப் போவதற்கல்ல;
ஒரு; காலம் கடந்த போராட்டத்தில் –
தமிழன் வென்றதாய்.., வாழ்ந்ததாய்; குறித்துக் கொள்வதற்கு!!

இப்படிக்கு..
கல்லறையில் உறங்கும் மாவீரர்களில் ஒருவர்….
—————————————————————
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

39 மின்சாரக் காதலியே..

சில்லறையாய் சிரிப்பவளே
செல்போனாய் அழைப்பவளே
ரிங் டோனாய் சினுங்கி சிணுங்கி
இன்பாக்ஸ் மெசேஜாக குவிந்தவளே!

டிவி போல இருப்பவளே
சீரியல் போல வளர்ந்தவளே
விளம்பரமாய் வந்து வந்து
பல சிறப்பு-நிகழ்ச்சியாக ஜொளிப்பவளே!

எஃப் எம்மை போன்றவளே
எது கேட்டாலும் தருபவளே
பாட்டை விட இனிக்க இனிக்க
நினைவு பேட்டரியால் உயிர்ப்பவளே!

லப்பு – டப்பாய் அடிப்பவளே
இதயக்கணினியை என்னுள்ளே தொலைத்தவளே
ஒரு மின்னஞ்சலும் அனுப்பாமலே யெனக்குள்
கேகா-பைட்டாய் நுழைந்தவளே!

ஆக, மின்சாரமாய் பாய்பவளே வாயேன்டி
ரெண்டு கே.பி. வார்த்தையேனும் பேசேண்டி
நீ பேசாத மௌனத்தை உடைத்துபோட
ஒரு மிஸ்டு காலு பார்வையாச்சும் பாரேண்டி!

ஃப்ரீ பெய்டு சிம்கார்டா நுழையாம
போஸ்ட்-பெய்டு காதலியா நீ வேணும்
மாதம்மாதம் கட்டிவிடும் பணம் போல
உன் ஆயுளெல்லாம் நிறைய என்னை அனுப்பிடுவேன்!
——————————————————————————————
வித்யாசாகர்

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்