32 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

றந்தும் வாழ்வதாய்
நம்மோடு இருப்பதாய்
அவர் புகழ் நிலைப்பதாய்
ஆயிரம் சொல்லிக் கொள்ளளாம்,

மீண்டும் –
பார்க்க தொட பேச
அருகாமை கொள்ள;
ஏன், தூரத்தில் கூட ‘இல்லையே’ என்ற உண்மையை
யாரால் மாற்றிட இயலும்?

எப்படியோ
இறந்தவர் உயிரோடில்லை என்ற
ஒற்றை சொல்லிலிருந்து
வலுக் கொள்ளும்; மரணத்தின் கொடுமையை
அழுகையை; யாராலும் அகற்ற முடிவதில்லை!!
——————————————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

31 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

விதை
கண்ணீர்
உறவுகளின் ஆறுதல்
எல்லாம் தோற்கிறது மரணத்திடம்,

இறப்பதை விட
இறந்தவரோடு இருப்பது
வெகு கடினம்!
————————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

30 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

ம்பவே முடியவில்லை சிலரின்
மரணத்தை,

யார் யார்..? என்று..? எங்கெங்கோ…………?!!!!!!!!

ஒன்றுமே உறுதியில்லை, என்பதும்
நினைவில் இருந்தே தொலைவதில்லை,

மரணம் மட்டும்
தவறாமல் நிகழ்ந்து விடுகிறது –
அது நினைக்கும் நாளில்!!
———————————————————

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

29 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

விழுந்து விழுந்து அழுகிறேன்
இதற்கு முன்
இறந்தவர்கள் கூட
கண்ணீரில் சொட்டுகிறார்கள்,

பார்ப்பவர்களுக்கு –
‘நம் அழுகையின் சப்தம் மட்டும் –
இறந்தவருக்காக
அழுவதாக காட்டிக் கொண்டாலும்

உள்ளே’ –
இறந்த எல்லோரையுமே நினைத்தும் தான்
அழுகிறது மனசு!
————————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

28 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

விழுந்து விழுந்து
கத்தியழு
மறக்கிறதா பார் மரணம்;
மறக்காது,

நிற்கிறதா பார் அழுகை
நிற்காது,

புரிகிறதா பிறப்பு இறப்பும்
புரியாது,

அதனாலென்ன வாழ்ந்ததாய்
சொல்லிக் கொள்;
மரணம் நீ இறந்ததாய்
குறித்துக் கொள்ளும்!
————————————-

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக