இறந்தும் வாழ்வதாய்
நம்மோடு இருப்பதாய்
அவர் புகழ் நிலைப்பதாய்
ஆயிரம் சொல்லிக் கொள்ளளாம்,
மீண்டும் –
பார்க்க தொட பேச
அருகாமை கொள்ள;
ஏன், தூரத்தில் கூட ‘இல்லையே’ என்ற உண்மையை
யாரால் மாற்றிட இயலும்?
எப்படியோ
இறந்தவர் உயிரோடில்லை என்ற
ஒற்றை சொல்லிலிருந்து
வலுக் கொள்ளும்; மரணத்தின் கொடுமையை
அழுகையை; யாராலும் அகற்ற முடிவதில்லை!!
——————————————————————-
























