27 ஒரு சின்ன மரணம் தான் யாரும் பயப்படாதீங்க..

ரணமென்ன
அப்பேர்பட்டதா என்று தான்
எண்ணம்;

ஆனாலும் தடுக்க முடியவில்லை
மரணத்தை,

படக்கென பிடுங்கிக் கொண்டதில்
மாலைகளாகக் குவிந்து
கண்ணீராக நனைந்ததில் –
மரணம் என்னை நீ – நாளைக்கென்று
குறித்துக் கொண்டிருக்கலாம்,

யார் கண்டது; இன்றைக்கே கூட…இருக்கலாம்!!
———————————————————–

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆக, அவனோட மரணம்; அவனாலேயே அவனுக்கு நிகழ்கிறது!!

ற்றுமணல்
வீடு கட்ட மட்டுமாச்சி,

ஆறு ஏரி குளமெல்லாம்
பாடத்தில் படிக்க மட்டுமாகுது,

சோறு குழம்பு பதார்த்தம் கூட
பேசனாயி போச்சி,

பேசினாலும் நடந்தாலும்
ஸ்டெயிலென்கிறான் மனிதன்,

செத்தாலும் மாலை போட்டு
வீடு கட்டி அழுவுறான்; குடிச்சிப்புட்டு ஆடுறான்;

சோறு கொஞ்சம் குறைந்தாலும்
பொண்டாட்டிய அடிக்கிறான்
போதை தெளிந்து விடியும் போது
பேன்ட் சட்டையில் திரியுறான் –
பெர்பெக்டுனு பீத்துறான்,

அவளும் மட்டும் லேசுல்ல
ஆள விட்டு வைக்கல –
பணத்தை கரைச்சி குடிக்காம
பாவி மனசு ஓயல,

பொய்யி சொல்லி அலையிறா
குடும்பமுன்னு மறைக்கிறா
கெட்டதெல்லாம் வளர்த்துவிட்டு
கோல் சொல்ல போகுறா,

ஜீன்ஸ் பேன்ட் ஒசத்தியாம்
பிசா மட்டும் இனிக்குதாம்
தலையில் வைத்த ஒற்றை ரோஜா
நாட்டுப்புற மேக்கப்பாம்,

ஜட்டியோட அலையுது
டூப் பீசுல சிரிக்குது
பட்டுப் புடவை காசுபோட்டு நைட்கிளப்ல ஆடுது
சினிமாவுல வரதெல்லாம் தெருவிலேயே நடக்குது
பாரின் போல மாத்திட்டதா கனவுலேயே வாழுது,

ஆண்டி கதை படிக்கிறான்
ஆன்லைன்ல தேடுறான்
பிகரு வெட்ட அலையிறான்
பொண்டாட்டி தெருவில் போனா பார்க்கிறவன வெட்டுறான்,

சோம்பேறி இளைஞன்டா
சொகுசா பிழைக்கும் பொழப்புடா
போராடி ஜெயிக்காத பயத்தில் வளரும் ஜென்மம்டா
ஏமாந்தவன் தலை கிடைத்தா –
அறுத்துப் போடும் அசிங்கம்டா,

ஒன்னுஒன்னா மாறுறான்
எல்லாமே ரசிக்கிறான்
சுயநல மோகத்துல உறவை தள்ளி வைக்கிறான்
அக்கப் பக்கம் தொடர்பு அறுந்து ஒத்த ஆளா வாழுறான்,

பத்துமாசம் பிள்ளைய முந்தி செத்தா தின்னுறான்
பொணத்து மேல ஏறியமர்ந்து சாமி வணக்கம் சொல்லுறான்
பூச்சி தின்னு இறால் தின்னு, மீனு போயி ஆடு போயி,
மாடு தாண்டி பாம்பு பல்லி தாண்டி மனுசனையும் மேயுறான்,

நல்லநேரம் கெட்டநேரம்னு நாளு பார்த்து அலையுறான்
காலண்டரை சாமியாக்கி வாழ்க்கையத் தான் தொலைக்கிறான்
வாஸ்த்து மந்திரம்னு மூளைய பணத்தோட விற்கிறான்
ராகுகாலம் எமகண்டம்னு சொல்லி கடவுள் நம்பிக்கைய கொல்லுறான்,

கூறு கேட்ட வளர்ச்சிடா
காலம் மாரி போச்சுடா
கண்டதெல்லாம் செய்துவிட்டு
கரீ- க்கீட்டுனு பேசுடா;

நெருப்பை கொளுத்தி தலைக்கு மேல
போட்டுகுட்டே ஓடுடா..
————————————————————————–
வித்யாசாகர்

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

எப்படியோ இனிக்கிறது தீபாவளி

வாழ்வின் சுவரெங்கும் மழை பெய்த நீராய்
ஒரு சோகம் அடங்கியதன் ஈரங்கள்;
ஈரங்களை கடந்து வெடிக்கும் பட்டாசு சப்தத்தில்
எப்படியோ இனிக்கிறது தீபாவளி!

ண்ணீர் கடன் பட்டினி வறுமை
என துரத்தும் ஏழ்மையின் ஓட்டங்கள்;
நாளைய ஒருவார உணவு செலவில் வாங்கிய
ஆடைகளால்; எப்படியோ இனிக்கிறது தீபாவளி!

குழந்தை தொழிலாளி எதிர்ப்பு, மாணவர்கள்
வளர்ச்சித் திட்டம் என்றெல்லாம் ஆயிரமாயிரம் பொய்கள்;
பொய்களையுடைத்து சீறி வான் முட்டும் – வண்ண வண்ண
ராக்கெட் வெளிச்சத்தில்; எப்படியோ இனிக்கிறது தீபாவளி!

ரணம் வலி ஏக்கம் இயலாமை நோய்
போதை எல்லாமுமாய் தின்றுதுப்பிய உயிர்;
எல்லாம் மறந்து பார்த்த மழலையின் சிரிப்பிற்காய் செய்த
பலகாரத்தில்; எப்படியோ இனிக்கிறது தீபாவளி!

றுதிவரை நேர்த்தியில்லாத வரலாறு
ஏதோ சொல்லிக்கொள்ள பாரம்பரியம்
வாய் பேச்சிற்கென்று ஒரு கலாச்சாரம்
முழுமையை தராத கற்பித்தல்;

எல்லோருக்கும் பொதுவிலாத வழிபாடு
மனிதரை கொள்ளும் மதப்பிரிகை
வேற்றுமையை வளர்க்கும் ஜாதியமைப்பு
முற்றும் தீராத தீண்டாமை;

இன்னும், அதிகம் அவதியுறும் மகளீர்
சமரசமுறாத கற்பு திணிப்பு
வெட்ட வெட்ட துளிர்க்கும் சமுதாய சீர்கேடுகள்
எல்லோரும் பெறாத இறைஞானம் – என

இழைக்கப் படும் அத்தனை கொடுமைகளும்
சேர்ந்து கொடுக்கும் – ஒழியா – மானுட வதைகளை கடந்தும்
தன் பெற்றோர் காட்டிய பாதையில்; எப்படியோ
இனித்தேத் தொலைக்கிறது தீபாவளி!!
———————————————————————————————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத்தில், தீபாவளியை முன்னிட்டு சிறப்புக் கவியரங்கம்..

பெரியோர் வீற்றிருக்கும் அவைக்கும்
தோழமை பூத்திருக்கும் கவிச் சபைக்கும்
முதல் வணக்கம்,

வானத்தில் பூ பூத்து
அன்பில் நட்பாய் காய் காய்த்து
வார்த்தையில் எளிமை கூட்டி
பேசுகையில் இதயக் கூடெங்கும்
என் தமிழ்போல் நிறையும் அன்பு தலைமை ஐயா சிவமணிக்கும் வணக்கம்!

ன் கவிதை சற்று சோகம் கூட்டலாம்; ஆனால் காரணம் நானல்ல எனக்கு தலைப்புக் கொடுத்த தமிழோசை என்று கூறி, ஒருவேளை அவர்கள் மகள் பிறந்த மகிழ்வில் கொடுத்திருக்க கூடும் என்றாலும் என் மூத்த மகளிற்கு ஈடான, அன்புத் தங்கை வித்யாவிற்கே முதல் வரிசை என்பதை முன்வைத்து என் கவிதைக்குள் நுழைகிறேன்.

னக்கான தலைப்பு: தீபாவளி சீர்வரிசை..

மார்மீது உதைக்காமல்
தோள்மீது சாய்ந்தவளே..
மனசெல்லாம் பாசத்தால
மழைபோல பெய்தவளே..

சீர்வரிசை தட்டெடுத்து
சின்ன அண்ணன் வாறேண்டி..
தெருவெல்லாம் –
கண்ணீரால் நனைக்காம என் முதல் பொண்ணே ஓடியாடி!!

ட்டமரம் பூத்தது போல்
உன் மனசெல்லாம் பூத்திடுமா..
இந்த அண்ணன் முகம் பார்த்ததுமே –
பத்து வயதுனக்குக் குறைந்திடுமா..?!!

தூக்கி நான் தாலாட்ட
அண்ணா என்றுருகிடுமா..
உன் தீபாவளி வரிசையில
என் உயிரெல்லாம் கரைந்திடுமா?!!

குறும்பு செய்து சிரிப்பவளே
அடிக்கும் முன்னே அழுபவளே..

உன் சின்ன மனசு இதயத்துல –
அண்ணனையே –
உயிர்வரைக்கும் சுமந்தவளே ஓடியாடி..

ரு நாள் பிரிந்தாலே
ஓயாது அழுபவளே..

பள்ளிக்கூட பையில் கூட
என் பிரிவை தூக்கிப் போனவளே..

காலை எழுந்து விழிக்கக் கூட
என் முகத்தையே கேட்பவளே.. ஓடியாடி..

கணவன் அடித்தானோ..
மாமியார் வைதாளோ..
நாத்தனா முறைத்தாளோ ..
துரும்பாட்டம் இளைத்தாயோ –
எனைக் கண்டதும்; பொய்யாய் சிரிப்பாயோ???!!!

சிரிப்பு தான்.. சிரிப்புதான்..
உன் ஒற்றை சிரிப்புதான் போதுமடி –

அது என் ஆயுள் வளர்க்கும்
சாமியாடி..

ஆழிக் குள்ள புதைந்து போன
ஏஞ் சோகம் தீர்க்கும் வாஞ்சையடி!!

னக்கு கருவா பிறந்தவளே..
மகளா பிறந்தவளே..

உனக்கு பாசத்துல பட்டுடுத்தி
கண்ணீரால் நகைபோட்டு
என் உயிரை பிடுங்கி வரிசை வைப்பேன்;

நீ
உயிரோடில்லை யென்றே
எப்பவுமே நினைக்க மாட்டேன்!!
——————————————————————————
வித்யாசாகர்

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

18 விடுதலையின் வெள்ளை தீ; பிரிக்கேடியர் சுப. தமிழ்செல்வன்!!

ன் வாழ்க்கை கதைநூறு சொல்லும்
முகமோ அத்தனையையும் ஒற்றைசிரிப்பில் வெல்லும்,
காலம் உன் களப்பணியை நினைவில் கொள்ளும்
தமிழர் வாழும்வரை உன்புகழும் நில்லும்!

வானம் தொடுங் காலம்வரை
சமரிலும் அரசவை படையிலும் நீயே தூணானாய்;
எங்களின் காலம் சொல்லா தீர்ப்பிற்கு – உன் மரணத்தால் ஒரு
தோல்விசாசனம் எழுதிப் போனாய்!

மீண்டும் வெற்றிமுரசு கொட்டும்வரை
ஓயாது எம் ரத்தம், வெட்டி சுக்குநூறாய் போட்டாலும்
குண்டு பல பொழிந்தாலும் –
இறக்க இறக்க பிறக்குமெம் இனம், அது நீ கொடுத்த சினம்!

ம் தமிழர்களை தின்று குவித்த மண்ணில்
ஒர்தினம் வென்றுகுவிப்போம்;
வென்றுகாட்டிய வெற்றிகளை உம் போன்ற
வீரமறவர்க்கே; துயிலம் – சென்றுகுவிப்போம்!

துவரை, மூச்சில் நீ சுமந்த சுதந்திர வேட்கையை
உன் சுவடுகள் காற்றினில் கலந்து தரும்,
எமை வஞ்சித்து; அழித்திட்டதாய் நகைக்கும் பகைவர்க்கு
நீ சொல்லிச் சென்ற பாடங்களே நீதியை புகட்டித் விடும்!

வாழ்வின் அசாதாரன சந்தர்ப்பங்களில் – வெற்றியாய் துளிர்த்த
உன் வீரம், விரைந்து எம் மண்ணின் விடிவாய் விடிந்துவிடும்;
அநீதிக்கு துணைபோன வல்லமை தேசத்தை – அன்று நீ
திருப்பி விரட்டிய பயம் – இன்றும் எதிரியை கொன்று போடும்!

வாழ்வின் பாதியை அல்ல, நீ உலகம் பார்க்க துவங்கியதே
ஈழத்து சுதந்திரப் போரில் அல்லவா,
உனக்காய் வாழும் நாட்களை எல்லாம் – நீ
எமக்காய் வாழ்ந்த – உலகறியா விடுதலை தியாகியல்லவா!

ன் வெள்ளை சிரிப்பில் கூட ஒரு தீயுண்டு
அது அன்பிற்கு உடன் எரிகையில் வெளிச்சமாய் பரவியது
ஆணவத்தின் எதிரே எரிகையில் – எதிரே நின்றவரை
வீரமாய் நின்று கொளுத்தியது!

னி உன் வெள்ளை தீயின் விடுதலை வேட்கை
எம் நெஞ்சில் எரியுமையா;
அது அடங்கும் நாள் – எம் மண்ணில் நீ கேட்ட
சுதந்திரம் கிடைக்குமையா!

காலத்தை எத்தனை ஏமாற்றி வஞ்சித்தாலும்
வெற்றி ஓர்நாள் கிடைப்பது காலத்தின் உறுதியையா –
அந்த வெற்றியை தாங்கும் கொடி; அன்று உன்
உழைப்பையும் தியாகத்தையும் சுமந்தே பறக்குமையா!!
——————————————————————————
வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்