என் முகிலுக்கு ஓர் தங்கை பிறந்திருக்கிறாள்… (16-10-2010)

ரு பிஞ்சிப் பூவில்
நெஞ்சு பூத்த சித்திரம் கண்டேன்,
நாக்குதட்டி தட்டி என் இதயம் – அதன் சிரிக்காத
சிரிப்பால் நிறையக் கண்டேன்,
சிப்பி திறந்ததும் முத்து சிரித்தது போல் – அந்த
சிறுவிழி திறந்து கருவிழி எனை காணக் கண்டேன்,
காற்றில் ஆடும் மலர்களின் மகரந்தமாய் – என்
பேச்சில் ஆடும் அந்த துள்ளும் துடிக்கும் கால்களை கண்டேன்,
அழைக்கும் செல்ல சப்தம் கேட்டு – இசைக்கும்
இமைக்கும் அதன் இமைகள் கண்டேன்,
குச்சி குச்சி விரலாலே – இதயம்
பிச்சி பிச்சி விரித்த அந்த அழகு விரல்களை கண்டேன்,
குயிலுக்கு மறந்த ராகம் போல – அதன்
கீச் கீச்சென்று கத்திய குரலை கேட்டேன்..
கிளிக்கு வாய்முளைத்த அழகாக – அதன்
குட்டி வாயில் அப்பா என்றழைக்க – இதோ
இன்னொரு தவமாக நீள்கிறது என் அன்பு மகளுக்கான காத்திருப்பு!!

வாழ்வின் கனவுகளில் – உண்மை சுமந்த
கனவாக மெய்கொள்கிறது சிலது மட்டுமே.
நான் வேண்டிக் கிடைத்த வரத்தில் மற்றொன்று, என் அன்பு மகள்.
என் தாய் எனை சுமந்த நன்றியை
என் மனைவி எனை தாங்கிய நன்றியை
என் சகோதரிகள் எனக்களித்த அன்பினை
என் தோழிகள் எனக்குக் கொடுத்த நட்பினை
என் தமிழச்சிகள் வாழ்ந்து சென்ற நல்வாழ்வின் சரித்திரத்தை
இனி அவளுக்காக சேர்த்து வைக்கிறேன் –
அவளின் காலடி பதிந்த என் நெஞ்சில் – இனி
பூக்கட்டும் இந்த பிஞ்சிற்கான ஆசைகள்…

————————————————————————-
வித்யாசாகர்

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 52 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு 65

நீ மூத்தவன் ஆனதையும்
நாங்கள் இரண்டாம் முறையாய் –
பெற்றோர் ஆனதையும் –
இன்று தெரிந்து கொண்டு
அவள் வயிற்றில் கை வைத்து –
செல்லமே நல்லா இருக்கீங்களா……….’ என்று
புன்னகைத்ததும் – நீ
இங்கும் அங்கும் திரும்பி பார்த்துவிட்டு
உனை கொஞ்சும் அந்த வார்த்தையில் – நான்
யாரை கொஞ்சுகிறேனோ என்று பார்த்து விட்டு
நான் வயிற்றில் இருக்கும் கையை எடுத்து – உனை
தூக்கிக் கொள்வதற்குள் –
நீ பரிதாபமாய் அவளின் வயிற்றையே பார்க்கிறாய்;

நாங்கள் கவனமாக இருப்பதற்கான
எக்-கண்ணிலும் சுண்ணாம்பு வைக்காததற்கான – எச்சரிக்கை
இதோ இந்த உன் பார்வையிலிருந்து பிறக்கிறது!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 64

து எப்படியோ –
மூத்த பிள்ளை
இளைய பிள்ளையால்
சலித்துவிடும் என்கிறார்கள்;

எனக்கு நூற்றியோர்
பிள்ளைகள் பிறந்தாலும்,
நீயும் சலிக்கமாட்டாய் –
மீதம் –
நூறு பிள்ளைகளையும் சலிக்கவிட மாட்டாய்’
என்று தெரியும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 63

வ்வொரு பெற்ற வயிறும்
வளர்த்த தோளும்
தன் குழந்தைக்கான அன்பையும்
ஆசைகளையும்
எழுதிவைக்க நாட்குறிப்பினை தேடுவதில்லை;

தேடி வைத்திருந்தால் –
ஒவ்வொரு வீட்டிலும்
ஞானமடா நீயெனக்கும் –
ஞானமடி நீயெனக்கும் –
நிறைய கனத்திருக்கும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 62

ன் நெடுந்தூர பயணத்தில்
உனை போல் ஒரு பூ –
உன் வீட்டிலும் பூக்கும்;

அன்று –
அதற்கு நீ தரும் நிறைய முத்தங்களில்
ஒன்றிலாவது நிறைந்திருக்கும் –
நானுனக்கு கொடுக்கும்
நிறைய முத்தங்களின் அன்பு!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக