வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “அப்பா..”

பூமிக்கு எனை
தாரை வார்த்த புண்ணிய தளம் என்றும்,

அவளின் முந்தானை
எனக்கான முதல் கைக்குட்டை என்றும்’ சொல்லி நம் தாயை நம் கண்முன் காட்டிய நம் அன்பு சகோதரிக்கு நன்றி கூறி – அடுத்த தலைப்பான தந்தை கவிதைக்கு செல்வோம்!

————————————————————————————————

வேர்வைகளால் பூத்த மலரில்
நம்மை வாசமாய் கமழ செய்தவரே;
இரவுபகல் நமை நினைத்து
தெருவெல்லாம் பயந்து நடந்து
வாழ்வெல்லாம் போராடிய உன்னதமே; உன்னதமே;
உன் காலடி தூசிகள் கூட – என் வாழ்வின் அற்புதமே; யெனில் –

உனைப் பற்றி நானென்ன சொல்ல..

இதோ என் கவி வந்து சொல்வார் – வாருங்கள் – ஐயா
திரு. சாதிக் பாட்சா அவர்களே;

————————————————————————————————

யாவை பற்றி ஒரு விஷயம் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன் –
தன்னம்பிக்கைக்கு இனி நாம் இவரை மட்டுமே –
அடையாளம் காட்டுவோம்; காரணம் ஆரம்ப கட்டத்தில்
கவிதைக்குரிய ஒரு ஆர்வம் மட்டுமே வெளிப்பட்ட இவர் ஆற்றலில்
இன்று பீறிட்டெழும் பா..’க்கள் ஆச்சர்யம் தான்.

அன்று, தன் ஆர்வத்தை,
உள்ளே சிக்கிக் கொண்டு தவிக்கும் பல கவிதையின் வேரினை
‘பிடித்தெரிந்து படைப்பாக்க இவர் பட்ட அவஸ்த்தை வேறு;

இப்போது இவர் அள்ளி அள்ளி வீசும் கவிதைகளின் ஜாலம் வேறு;
மிக்க பிரம்மிப்பும் வாழ்த்துக்களும் ஐயா!!

————————————————————————————————

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “கணவன்..”

ந்தையை பாடினால்
தரணியில் உயர்வு என்றும்,

உருப்படியாக நான் உங்கள்முன் நிற்பதற்கு
அவர் எடுபுடி ஆனாரென்றும்’ தந்தையின் அருமையினை நம் நெஞ்சமுருக பாடிச் சென்ற ஐயா சாதிக் பாட்சா அவர்களுக்கு நன்றியரிவித்து அடுத்த கவியரங்க தலைப்பான ‘கணவனுக்கான’ கவிதைக்கு செல்வோம்!

————————————————————————————————

ற்றே கண்மூடிய கோழி தூக்கம்,
மாத சம்பளம் வந்தாலும் வராவிட்டாலும் தொல்லை,
ஊரிலிருந்தாலும் – வெளிநாடு வந்தாலும் கடங்காரன்,
அம்மா மாமியார் அப்பா மாமனார் – யாரோ ஒருவருக்கு –
சற்று; சலிப்பான பிள்ளையான ‘கணவனை பற்றிக் கவிதை பாட,

நம் அன்பு சகோதரர், உழைப்பின் கொடையாளர், அன்பின் பெருமிதம் திரு உ.கு. சிவகுமார் ஐயா அவர்களை மேடைக்கழைக்கிறேன்…

————————————————————————————————

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “மனைவி..”

ட்டிலுக்கும் –
தொட்டிலுக்கும் பாடுபடுபவன் என்றும்,

சுமைகளை சுகமாக்கிக் கொள்ளும்
வரம் கணவனென்றும்’ மிக சிறப்பாக கவிதை பாடிய ஐயா அவர்களுக்கு என் மிகையான பாராட்டினைத் தெருவிகிறேன். காரணம், ஒரு கணவனை பற்றி ஒரு மனைவி எனும் பெண் பாட இருந்தார் சூழ்நிலை காரணமாக அவர் வர இயலாமல் போனாலும் தானே ஏற்று சிறப்பாக இவ்விரண்டு நாளில் கவிபடைத்த திறமையான தமிழோசையின் தலைமை இவர். ஐயா அவர்களுக்கு நன்றி பாராட்டி… அடுத்த தலைப்பான மனைவியை பார்ப்போம்
————————————————————————————————

ன் கனவுகளை அவனுக்காய் சுமப்பவள்
தன் சந்தோசப் பூக்களில்; அவன் குடும்பத்தை சுமந்தவள்
தன் அக்கறை பாத்திரத்தில்; அவனை மட்டுமே வார்த்துக் கொண்டவள்
அவனின் கோபதாப நெருப்பிற்கு தன்னையே விறகாக்கிக் கொள்பவள்
அவனுக்குள் தானாகி; தனக்காக மட்டுமே வாழ்பவளான
மனைவி – யை பற்றி கவிதை பாட செயல் வீரர், என் அன்பு சகோதரர்-
கவிதைகளை வார்ப்பதோடு கவிஞர்களை வார்க்கும் – தமிழோசையின் செயலாளார் திரு. பிரமோத் அவர்களை மேடைக்கழைக்கிறேன்!
————————————————————————————————

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “மகன்..”

புதிதாக திருமணமாகி மனைவியை ஊரில் விட்டுவந்திருப்பவரை மனைவி பற்றி பாட அழைக்கிறார்களே சோக கவிதை பாடி கண்ணீரில் நனைத்துவிடுவாரோ என்றெண்ணினேன், இவரோ,

சேலை தலைப்பின்
வாழும் கலையையும்,

மாதவம் செய்தேன் நான் அதனால் தான்
இந்த மாதவி கிடைத்தால் என்றும்’ தன் மனைவியை பெருமைபடுத்தி சென்றிருக்கிறார். அன்பு தம்பி பிரமோத் ராஜனுக்கு வாழ்த்தினை தெரிவித்து மகனை பற்றி என்ன பாடுகிறார் நம் அடுத்த கவிஞரென்று பார்ப்போம்..

————————————————————————————————

னிதத்தின் அன்பில் பூத்தவன்
மனிதர்களின்; நிறம் மாறாத வாடையை ஒத்தே பிறந்தவன்
பிறக்கையில் கூட பழசையே பகிர்ந்துக் கொண்டவன்
புதியதாய் ஏதேனும் செய்யத் துடிப்பவன்
நாளைய உலகின் மாற்றத்தை இன்றிலிருந்தே தொடங்கப் பிறக்கும்
மகனை பற்றி கவிதை பாட, நம் – மூத்த கவிஞர், முத்துக் கவிஞர்,  வாய்பாட்டுக்கவிஞர்  திரு. சிவமணி அவர்களை மேடைக்கழைக்கிறேன்!

வரின் அந்த ‘வானத்திலொரு பூப்பூக்கும் கவிதைக்கு’
என்றுமே நான் ரசிகன் தான்! சிவமனிக்கு நன்றி!
————————————————————————————————

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வித்யாசாகர் தலைமையில் கவியரங்கம் – “மகள்..”

களை மரபுக் கவிதைக்கு ஒப்ப
சிறப்பான கவியென்றும்,

பேர் சொல்லும் உறவு
மகன் உறவு தானென்றும்,

மனைவிக்கு தெரியாமலேனும்
தன் குடும்பத்திற்கு உதவுபவன் என்றும், மகனை பற்றி சிறப்பாக கவிதை பாடிய சிவமணி அவர்களுக்கு நன்றி பாராட்டி அடுத்து மகளை பற்றி பாட வரும் இறுதிக் கவிதையை பார்ப்போம்..

————————————————————————————————

ரு கனவுகளின் ஒரு கனவு
பழைய பாட்டினை மாற்றிப் பாடவந்த புதுக் குயில்
வார்க்கப் பட்ட தெருவினை –
சுதந்திரம் நோக்கி திருப்பிக்கொள்ளப் பிறந்த பழைய பெண்பிறப்பு
சுட்டாலும் சுடாவிட்டாலும் – மிளிரும் மணக்கும் அன்புப் பிழம்பு
இப்பூமிப் பந்தின் நீதிய அநீதிய கணக்குகளுக்கு மற்றொரு சொந்தக் காரியான மகளை பற்றி பாட – சொல்லின் செல்வன், வீரியக் கவிஞன், வான்முட்டும் ரசனை பூட்டிய  கொம்பன் – சகோதரர் அபுதாகிர் அவர்களை மேடைக்கழைக்கிறேன்!

————————————————————————————————

Posted in கவிதைகள், கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக