ஒரு லட்சமாம்
இரண்டு லட்சமாம்
கணக்கு சொல்கிறது செய்தி
முல்லைவாய்க்காலில் இறந்தவர் பற்றி;
கணக்கில் வராது இறந்து போன
எத்தனயோ உயிர்களுக்கென்ன
இன்னொரு பிறப்பையா
திருப்பித் தந்துவிடுமிந்த தேசங்கள்????
ஓஹோ; தமிழரை
உயிர்கணக்கிலிருந்து
தள்ளிவைத்துவிட்டார்கள் போல்
சிங்களன் வெல்லும் வரை; பாவிகள்!
























