கவிதைக்கு
பரு பொருள்
ஞானமல்ல;
வலி என்பதை –
நீயில்லாத கால
இடைவெளியில் –
கனத்து நிற்குமென்
கவிதைகள் சொல்கின்றன!
கவிதைக்கு
பரு பொருள்
ஞானமல்ல;
வலி என்பதை –
நீயில்லாத கால
இடைவெளியில் –
கனத்து நிற்குமென்
கவிதைகள் சொல்கின்றன!
உனக்குப்
பிடித்தமான
உணவுகளை –
நீயில்லாத பொழுதில்
தின்கையில்
கண்ணீரின் உப்பு
அதிகமாக தான்
கரிக்கிறது!
நிறைய நிரபராதிகளின்
வாதம் –
சிறை கம்பிகளுக்கிடையே
நின்று –
உலகை வெறித்தாலும்,
வெளியே நிற்கும்
குற்றவாளிகளுக்கு
வெறும் – பணம் தரும் சிரிப்பு
பணம் தீரும்போதே
நின்றும் விடுகிறது!
நிற்க,
இங்கே சிறைக் கம்பிகளுக்கிடையே
வீழ்ந்த ‘நியாயமே’ பேசப் பட
வேண்டுமெனில் –
நிரபராதிகள்
காலத்தின் கேள்வியாய்
சிறைகம்பிகளுக்கு மத்தியில் நில்லாமையை
நீயும் நானும்
சேர்ந்து சிந்தித்தாலன்றி மாறாது!
குடிப்பவன் குடிக்கிறான்
நல்லவனென நடிப்பவன்
நடிக்கிறான்,
இருப்பவனின் நாற்றம்
வெளியில் தெரிவதில்லை.
இல்லாதவனின் நாற்றம்
பெரிது படுத்தப் படுவதில்லை.
இரண்டுக்கும் மத்தியில்
பண்பாடு குலைகிறது
அநாகரிகம் கூட
நாகரீகமென மெச்சப் படுகிறது;
காலமாற்றம் என்னும் ஒற்றை
பெயரில் –
நிறைய பேர்
தவறாகவே பதியப் பட்டிருக்கிறோம் –
கால ஏட்டில்!!
ஊரெல்லாம்
மரணமும்
மல்லிகை தோரணமும்
வேளை வேளைக்கு சோறும்
உடுத்த பட்டாடையும்
மினுக்க அத்தனையும்
இருந்துக் கொண்டு தானிருக்கிறது;
இறப்பவரை பற்றியும்
அழுபவரை பற்றியும்
வருந்தாத இடத்திலிருந்தே –
சிரிப்பவருக்கும் –
மினுக்குபவருக்கும்
மரணுமும் மல்லிகையும்
மறுபரிசீலனை செய்யப் படுகிறது!