ஞானமடா நீயெனக்கு – 12

ப்பொழுதெல்லாம் நீ
நன்றாகவே நடக்கிறாய்,

இருந்தும் –
சந்தைக்கு செல்கையில்
வீடு வருகையில்
வெளியே செல்கையில்
உனை தூக்கிக்கொண்டே
நடக்கிறேன்,

நீ கனத்தாலும்
உனை சுமப்பதில்
எனக்கொரு ஆசை;

சொர்கத்தை சுமப்பது
இப்படித் தான் –
சுகம் போல்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 11

ச்சில் –
ஒழுக ஒழுக
எனைக் குடிக்கிறாய்,

உடம்பெல்லாம் ஏறி மிதித்து
கன்னம் கீறி
மூக்கை கடித்து
தலைமுடி பிடித்திழுத்து
உதட்டை கிள்ளி
அப்பப்பா…
உனை என்ன செய்கிறேன் பாரென்று வந்த
கோபத்தை –
ஒரேயொரு முத்தத்தில்
ஒத்திஎடுக்கிறாய்.

நான் கொஞ்சம் சிரிக்கையில்
மீண்டும் – நீ
கிள்ளி கீறி எனை ஏறி மிதிக்க
நீள்கிறது – உனக்கும் எனக்குமிடையே
ஒரு –
முத்தத்திற்கான போர்!

Posted in ஞானமடா நீயெனக்கு | 4 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 10

ல்லாமே –
களைந்து கிடக்கும்
வீடு,

மடித்து வைத்திடாத
துணிகள்,

இங்குமங்குமாய் சிதறிய
தின்பண்டம்,

வீட்டிற்கு வரும்
விருந்தாளிகளுக்கு –
தெரியுமாத் தெரியவில்லை
இது –
நீயிருக்கும் வீடென்று!

Posted in ஞானமடா நீயெனக்கு | 2 பின்னூட்டங்கள்

ஏனோ; இந்த வாழ்க்கை??? (24)

மூனு வேளை சோறு
ஒரு வேளை ஆனது,

பத்து மணிநேர தூக்கம்
ஐந்து மணிநேரமானது,

மாதத்திற்கு ஒரு முறை
வெட்டும் – முடி கொட்டி – மொட்டைதலையானது,

ஒரு நேர உடல்பயிற்ச்சிக்கும்
அவகாசமின்றி –
தொப்பை வேறு சட்டி போலானது,

னிப்பு தின்பதோ
காரம் விரும்பித் தின்பதோ
சிகடை, தேன்மிட்டாய், கைவிரல் அப்பளம்,
அச்சுமுறுக்கு, தட்டை, ஒட்டையடை சமாச்சாரமோ
அறவே மறந்து போனது,

ஸ்டைலுக்கு பிடித்த சிகரெட் அணைந்து
ருசிக்க குடித்த பீரும் விஸ்கியும்
பழக்கத்திலிருந்து தீர்ந்து போனது,

சினிமா –
எப்பொழுதாவது
பொழுதை ஆக்கும் படங்கள் வந்தால்
மட்டுமே என்றானது,

ர் சுற்றும் அளவு நேரமோ
அத்தனை அதிக பணமோ
கையிருப்பில் – இருப்பதில்லை,

ங்கு போய் எங்கு வந்தாலும்
கணக்குப் பார்த்து பார்த்து
வட்டிக்குக் கடன் வாங்கும் அளவிற்குக் கூட
வாழ்தலின் நிம்மதியை
வாங்க இயலா அன்றாட போக்கு,

தில் வேறு –
அம்மா, அப்பா,
உறவு, நட்பு, சுற்றத்தார் என
இறப்பின் இழப்பு
சொல்லி மீளா வலியும் அழுத்தமுமாய்
தன் மரணம் வரை நீளும் கொடுமை –
தாங்க முடியா ரண பாரம்; வேதனையின் உச்சம்,

ன்றோ பார்த்தவன்
எங்கோ பழகியவனை கூட
நினைத்து வருத்தப் படுமளவிற்கு
பாதிக்கப் பட்ட ஒரு
பண்பட இயலா பதட்டமான மனநிலை,

வாழ்வின் தூரகால
இடைவெளிக்குப் பின்
திரும்பிப் பார்க்கையில் –
எதையுமே
பெற்றுக் கொண்டதாய் இல்லாமல்
விட்டுசெல்லவே வந்ததாய் உறுத்தும்
ஒரு பாவப் பட்ட பிறப்பு,

ஆக, எத்தனையோ வலியினூடே
பல போராட்டங்களை தாண்டியும்
வாழ முற்படுகையில் –
உள்ளே ஒரு மனசு
கூட்டி கழித்துப் பார்த்து
‘ஏனோ’ இந்த வாழ்வென
நொந்துக் கொண்டு தானிருக்கிறது.

முடிவாய்;நொந்து போகையிலும்
சிந்திப்பது தான் –
வாழ்க்கை போலும்!!
——————————————————-
வித்யாசாகர்

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | 6 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 9

நானும் நீயும்
அடித்து அடித்து
விளையாடுகிறோம்,

நீ எனக்கு
வலிக்கும்வரை அடிக்கிறாய்..,

நான் –
எங்கு உனக்கு வலித்துவிடுமோ என
அடிப்பது போல்
பாவனை செய்கிறேன்!

Posted in ஞானமடா நீயெனக்கு | 3 பின்னூட்டங்கள்