Tag Archives: விடுதலை கவிதைகள்

3 முள்ளிவாய்க்காலிலிருந்து…

ஒரு நூறு தெரு தள்ளி தான் கேட்கிறதந்த சப்தம்; கண்ணீரால் யாரையோ கூப்பாடு போட்டழைக்கும் ஒரு ஓலம் அது; சுலபமாய் சொன்னால் மரணம் எனலாம், வாழ்பவன் கற்றும் தெளியாத அல்லது – கற்காத பாடம். மரணம் என்றாலே நெஞ்சை உலுக்கும் பயத்திற்கு மரணமின்றியே இயங்குகிறது நிறைய சதைகள்; ஆம், ஜாதி பேசி மதம் பேசி இனம் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

2 கல்லறைகளின் மீதாவது உறங்கி; உயிர்திருப்போம்!

எம் சுவாச மூச்செலாம் வெடிகுண்டு நெடியில் விசமேறிப் போயிருந்தும் – விடுதலைக்கென்றே உயிர்சுமந்துத் திரிகிறோம்: தெருக்கள் நெடுகிலும் உலாவந்த எம் சின்னஞ்சிறு குழந்தைகளெல்லாம் வீழ்ந்த குண்டுகளில் சிதைந்துப் போனாலும் தெருவின் கடைகோடி வீட்டின் – ஒற்றை உயிருக்காய் விடுதலை கோரி நிற்கிறோம்; பசுமை குன்றியிரா எம் தேச நிலங்களிலெல்லாம் – கன்னி வெடிகளே புதைந்திருந்தாலும் எடுத்து … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக