Tag Archives: இனம்

வெல்லும் ஈழம் தான்; முள்ளிவாய்க்கால் முடிவு தான்!!

ஊர்தாளி அறுத்த கதை உறவு மானம் பறித்த கதை என் தமிழர் ரத்தம் குடித்த கதை இவ்வுலக மறியும் தெரிஞ்சிக்கோ; உன் முடிவை நீயும் புரிஞ்சிக்கோ; ஈழ-மது  மலரும் மலரும் என் பாட்டன் மண்ணில் உறவுவாழும் காலம் போட்ட முடிச்சமாத்தி போட்ட முண்டம் நீயடா உனக்கான பதிலை யினி ஊரு மொத்தம் சொல்லுண்டா; ஊருவிட்டு; வந்தவன் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 12)

இதற்கு முன்.. “ஏன் நான் உங்களை தொல்லை செய்கிறேனா?” “ச்ச ச்ச.. போயிட்டு வாங்க, நான் அங்கிருக்கிறேன் பேசுவோம்” கழிவறை கதவு மூடிவிட்டு வெளியே வந்தேன். அவள் முகத்தை சோகமாக வைத்தவாறு என் பின்னே வந்து “நான் உங்களை காணோமே என்றுதான் வந்தேன், வாருங்கள் போவோம்” என்று சொல்லிவிட்டு என்னுடனே வந்து பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். … Continue reading

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 11)

இதற்கு முன்.. அவளே கொஞ்சம் அவளை ஆசுவாசப் படுத்திக் கொண்டாள். சற்று நிதானித்து என்னைப் பார்த்தாள். கலங்கிய விழிகளில் கோபத்தை கடந்து உடைத்துக் கொண்டு வழிந்தது கண்ணீர் அவளுக்கு. எனக்கு அவளைப்  பார்க்கையில் மனம் எனையறியாது கலங்கித்தான் போனது. எத்தனை வலியிருக்கும் அவளுக்கு!! ஒரு நாள் குழந்தையை காணாவிட்டால் எப்படி துடித்துப் போகிறோம் நாம்? கடைக்குப் … Continue reading

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 10)

இதற்கு முன்.. “என்னைப் போல் எத்தனை பேரை கொள்வீர்கள் என்றேன்” அவளும் அதிர்ச்சியுற்றாள். “வேறென்ன காட்டிக் கொடுக்கும் சமுகத்திற்கு மத்தியில் தானே நம் போர், பிரச்சனை, எல்லாமே…?” “அதென்னவோ சரியாகத் தான் சொன்னீர்கள், அந்த சண்டாளன் அன்று எங்கட தலைவரை விட்டுப் போகல்லை யென்டால்; இன்று இத்தனை பெரிய அவலம் ஏது எம் மக்களுக்கு? இன்று … Continue reading

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 9)

இதற்கு முன்.. சடாரான ஏதோ வந்து மேல் விழுந்தது போலிருந்தது. கண்களை திடுக்கிட்டுத் திறந்தால் அம்மாவின் கையை விட்டுவிட்டு ஓடிவந்த குழந்தை யொன்று என் மீது விழுந்து எழுந்து மன்னித்துக் கொள்ளுங்கள் அங்கிள் என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு ஓடியது. ஒரு நொடி எனக்கு எங்கிருக்கிறேன் என்னானது என்று ஒன்றுமே புரியவில்லை. பின் கடந்த ஓரிரு வினாடிகளுக்குப் … Continue reading

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்