Tag Archives: ஈழக் கவிதைகள்

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (39)

இறந்த என் வீரர்களுக்கும் உறவுகளுக்கும் விளக்கேற்றி விளக்கேற்றி வைக்கிறேன்; கண்ணீர் அனைத்து அனைத்து விடுகிறது. உலகிற்கு எங்களின் இருட்டு மறைக்கப் பட்டு வெளிச்சம் மட்டுமே தெரிகிறது போல்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (38)

ஒன்று இரண்டு மூன்றேன்று சுட்டிருப்பானோ சிங்களவன்?!! சுடும்போது ஏதேனும் ஒரு குரல்கூடவா அவன் உறவை அவனுக்கு நினைவுருத்தவில்லை; போகட்டும், நம் சமர் – எவனை கொல்வதுமல்ல ஈழம் – வெல்வது மட்டுமெனக் கொள்வோம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மே-18, முள்ளிவாய்க்கால் நினைவுதினக் கவிதைகள் (37)

தேச ஜாம்பவான்களே வாருங்கள்; முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் ஒரு விளக்கேற்றிச் செல்லுங்கள்; உம்மோடு – மனிதராய் பிறந்ததற்கு ஒரு விளக்காகவேனும் எறிந்துவிட்டுப் போகட்டும் எம் உறவுகள்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக