Tag Archives: ஈழம்

8 பிணமென்றே பெயர் வைத்தேன்

   பிணங்களின் எரியும் புகையில் புகுகிறது பள்ளி சீருடைகள்;   பிணங்களின் அழுகிய நாற்றத்தில் மறந்தன மரண பயம்;   பிணங்களின் முறிந்த உறுப்பில் முடங்கின உயிர் பறித்த வலி;   பிணங்களின் தெருவோர குவியலில் அறுந்தன உயிரின் ஆசை;   பிணங்களின் பிணமென்னும் பெயரில் கிடக்கின்றன எம் – வீரமும் உறவுகளும்;   பிணமென்றே பெயர்வைத்தேன் வேறென்ன … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

7 சுட்டு எரிந்ததொரு காடு..

யார் மரணமும் யாரையுமே நோகவில்லை  முடிவில் – முள்ளிவாய்க்காலை விழுங்கி சுடுகாடாய் கனத்தது உலக தமிழரின்; கல்மனசு! ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

6 சுட்டு எரிந்ததொரு காடு..

போர் போரென கதறிய கத்திய அவலகுரலில்; செவிடாகிப் போயினர் உலகத்தினர், ஊமையாகிப் போயினர் தமிழர்கள்! ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

5 சுட்டு எரிந்ததொரு காடு.. (64)

ஆணும் பெண்ணும் குழந்தையுமென – கொன்று குவித்தவனுக்கு பெயர் போர்வீரனும், கொள்ளப் பட்டவனுக்குப் பெயர் தீவிரவாதியுமெனில்,   சொன்னவனை இனி சிங்களனென உரைப்போம்! ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

4 சுட்டு எரிந்ததொரு காடு.. (63)

தாய்மை பூண்ட பெண்களின் அடி வயிற்றில் பற்றி எரியட்டும்; முள்ளிவாய்க்காலின் இழப்பும் ஈழக் கனவும் – காரணம், ஆண்கள் விட்டதை பெண்களாவது பிடிக்கட்டும்!  ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக